விரல் சூப்புவதால் ஏற்படும் பிரச்சனைகள்
குழந்தைகள் பலருக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும் .
விரல் சூப்புவதால் என்ன விளைவு ஏற்படும் என்று சிந்திக்காமல் நாம் வளர்ந்தால் தான் இன்று பல பற்களை குறைபாடுகள் ஏற்படுகின்றன.
நம்மில் பலருக்கு நிகழ்ந்த உடல் மற்றும் மன மாற்றங்கள் நம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க குழந்தைகள் விரல் சூப்பினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.
விரல் சூப்பும் பழக்கம் குழந்தையின் தனிமை பசி உணர்வு காரணமாக ஏற்படலாம் .
குழந்தைகள் இவ்வாறு விரல் சூப்பி கொண்டே இருப்பது குழந்தைகளுக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குழந்தைகள் வளரும் பருவத்தில் வாயில் விரல் வைத்து உறங்குவது, எப்பொழுது பார்த்தாலும் விரலை வாயில் வைத்துக் கொண்டே திரிவது அவர்கள் வளர்ந்த பின் பால்ப்பற்கள் முளைத்து அவை விழுந்து பின்னர் பற்கள் முளைக்கும் பொழுது ஒரு வரிசையில் அல்லாமல் மேலும் கீழும் ஆக கோணலாக எத்து பல்லாக வளர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது.
மேலும் இப்படி வளர்ந்த பற்களில் அத்தனை பலம் இல்லாமல் போகும் நிலை உருவாகலாம் .
குழந்தையாய் இருந்து சிறுவர் பருவத்திலும் கூட சூப்பிய கையை எடுக்காமல் குழந்தை வளர்ந்தால் பின்னர் குழந்தையின் கையில் விரல்களில் ரத்த ஓட்டம் குறைந்து அதனால் உடல் உறுப்புகளின் செயல்படும் திறன் குறைந்து விரல்கள் உணவற்று உணர்வற்று போகும் நிலை உருவாகலாம்.
இந்த விளைவால் குழந்தைகளின் முக்கிய உறுப்பான கைகள் மற்றும் அவற்றின் இயக்கம் பாதிக்கப்படுகின்றன.
குழந்தை பிறந்ததிலிருந்து கடைப்பிடிக்கும் பழக்கத்தை பள்ளி சென்ற பின்னும் மேற்கொண்டால் அங்கு மற்ற குழந்தைகள், ஆசிரியர்களின் கேளிக்கு உள்ளாகும் பொழுது குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும் குழந்தை வாயில் எதையாவது வைத்து வளர்த்து பழக்கப்பட்டு விடுவதால் வளர்ந்த பின் வாயில் வைக்க எதையாவது தேடும் அந்த சமயத்தில் புகைபிடித்தல், மது, போதை போன்ற பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இது போன்ற பாதிப்புகள் குழந்தையின் ஒரு சிறிய பழக்க வழக்கத்தால் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து பின்னாளில் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கின்றது.
ஆகையால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு புரியும் வகையில் அன்பாக எடுத்துச் சொல்லி வாயில் கையை வைத்து வளர விடாமல் தடுக்க வேண்டும்.
அதே சமயம் அவர்களின் உணர்வுகள் அதாவது குழந்தை பருவத்தில் இருக்கும் பயம் மற்றும் பாதுகாப்பு உணர்வுகள் குறித்து எந்தவித பாதிப்புகளும் குழந்தைகளிடம் ஏற்படாத வகையில் விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டும் .
குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிகழ்காலத்தில் அவர்கள் மனம் பாதிக்கப்பட்டு விடாமல் இருக்கும் வகையில் அன்பாய் எடுத்துச் சொல்லி குழந்தைகளை திருத்துவது பெற்றோரின் கடமையாகும்.
அருமையான பதிவு👌💐💐KAPPIYAS VILLAGE KITCHEN
பதிலளிநீக்குமிக்க நன்றி
பதிலளிநீக்கு