தலையணை மந்திரம் தெரிய இறுதி வரை படியுங்கள்!
தலையணை இல்லாமல் தூங்கினால் உடலில் என்ன மாற்றம் நிகழும் என்று தெரியுமா?
தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நாம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம்.
இன்னும் சிலர் தலைக்கே இரண்டு தலையணை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள்.
இன்னும் சிலர் காலுக்கு ஒரு தலையணை பக்கத்தில் கட்டிபிடித்துபடுக்க தலையணை என விதவிதமாக தூங்குவதற்கு தலையணை வைத்திருப்பார்கள்.
தலையணையே இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
1.தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு தண்டுவடம் அதன் இயல்பான நிலையில் இலகுவாக இருக்குமாம்.
2.இதனால் உடல் வலி, தண்டுவட பிரச்சனை துளி கூட ஏற்படாதாம்.
3. உயரமான தலையணை பயன்படுத்தும் போது படுக்கை நிலை குலைந்து போகும் இதனால் தண்டுவடம் பாதிக்கும்.
4. தலையணை இல்லாமல் தூங்கினால், தோள்பட்டை, கழுத்து வலியும் கூட வராது.
5.தலையணை இல்லாமல் தூங்கினால் உடலின் எலும்புகளை சீராக்க முடியும்.
6. முகச்சுருக்கம் ஏற்படாது.
தலையணை எப்படி பயன்படுத்துவது சிறந்தது
1.சிலர் நேராகப்படுத்து தூங்குவார்கள். அவர்களுக்கு மெல்லிய தலையணையே சிறந்தது. இது கழுத்து தலை தோள்பட்டை பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.
2.சிலர் ஒரு பக்கமாக படுப்பதையே வழக்கமாக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு அடர்த்தியான தலையணை வைத்து படுத்தால், தோள்பட்டை, காதுக்கு இடையே சமநிலை ஏற்படுத்துமாம்.
3. குப்புற படுத்து தூங்குபவர்களுக்கு தட்டையான தலையணையே நல்லது. இது நம் தலையை நிலையை அசெளகரியமாக உணராமல் இருக்க உதவி செய்வதோடு, முதுகு, இடுப்பு வலியையும் விரட்டி அடிக்கிறது.
4. சிலருக்கு மருத்துவர்கள் தலையணை வைத்து தூங்க பரிந்துரைத்து இருப்பார்கள்.அவர்கள் மட்டும் தலையணை வைத்து தூங்கலாம்
தலையணை இல்லாத தூக்கம் உடலில் நிகழ்த்தும் மாற்றம் இதுதான் நிஜ தலையணை மந்திரம்