அற்புத மருத்துவ குறிப்புகள் 42

மருத்துவ குறிப்புகள்  42
1. சுரைக்காய் வாரம் இரண்டு தடவை சாப்பிட்டு வர தொப்பை குறையும்.

2. மாதுளம் பழம் சாப்பிட குடல் புழுக்கள் அழியும் .

3. மாதுளம் பூவை கசாயம் செய்து குடிக்க வயிற்று கடுப்பு குணமாகும்.  

4. வில்வ மரத்தின் பூவுடன் புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட குடல் வலிமை பெறும்.

5. நாள்தோறும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும் .

6. நாள்தோறும் ஒரு துண்டு பப்பாளிப்பழம் சாப்பிட செரிக்கும் திறன் பெருகும்.

7.  நாள்தோறும் வாழைப்பழம் சாப்பிட குடல்புண், சரும நோயை தடுக்கும்.

10. வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி தீரும்.

11.  அவரை இலை சாரை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும்.

12.  நொங்கை தோல் உரிக்காமல் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும்.

13. செம்பருத்தி இலைகளை தூளாக்கி நாள்தோறும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் இருக்காது.

14. தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது அடைப்பு நீங்கும்.

15.  நெல்லிக்காயை இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் விக்கல் தீரும்.

16. கிராம்பை தணலில் வதக்கி வாயில் இட்டு சுவைக்க தொண்டை புண் ஆறும்.

17.  முற்றிய மா இலையை பொடியாக்கி தணலில் போட்டு சுவாசிக்க விக்கல் குணமாகும்.

18. தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் ஆறும்.

19. மஞ்சள், அருகம்புல், சுண்ணாம்பு கலந்து பூசி வர நச்சு நகச்சுற்று குணமாகும்.

20.  தூதுவளை செடியில் ரசம் வைத்து சாப்பிட சளி தொல்லை நீங்கும்.

21. மாதுளம் பழச்சாறு எடுத்து அதனுடன் தேன் இரண்டு தேக்கரண்டி விட்டு பருகினால் இதய நோய் ஏற்படாது.

22.  ஆறிய வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட ஈரல் நோய்கள் குணமாகும் .

23. சின்ன வெங்காயத்தை அறிந்து தேன் விட்டு வதக்கி உட்கொண்டால் இருமல் குணமாகும்.

24.  சிறிது சீரகத்துடன் உப்பு, பொடி கலந்து உட்கொள்ள வயிற்று வலி குணமாகும்.

25.  பாசிப்பருப்புடன் தக்காளி பழத்தை சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட கண் பார்வை தெளிவடையும்.

26.  கரிசலாங்கண்ணி கீரையை வாரத்திற்கு மூன்று நாட்கள் பொறியலாக வைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.

27. வெந்தயக் கீரையை வாரம் இரண்டு நாட்கள் உண்டு வர நீரழிவு மட்டப்படும்.

28. சின்ன வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலம் பற்கள் பாதுகாக்கப்படுகின்றன. பக்கவாதம் வராமல் தடுக்கப்படுகிறது.

29. புதினா இலையின் சாறுடன் தேன் கலந்து குடிக்க மாதவிடாய் ஒழுங்காகும்.

30. வெள்ளை பூண்டு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமாகும்.

31.  இஞ்சி சாறு, எலுமிச்சம் பழச்சாறு இவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி குணமாகும்.

32. ஒரு கப் சுடு நீரில் ஒரு தேக்கரண்டி தேன் விட்டு நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் மூச்சுரைப்பு குணமடையும்.

33. வேப்பம் பூவை நெய்யில் வதக்கி சோற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

34. குடல் தொடர்பான எல்லா நோய்களையும் முள்ளங்கி குணப்படுத்தும் .

35. முள்ளங்கியை அதிகம் சேர்த்துக் கொண்டால் குடல் புண் குணமாகும்.

36. முள்ளங்கி சாறு சாப்பிட தலைவலி, சளி, இருமல் குணமாகும்.

37. அத்திப்பழம் நாள்தோறும் ஐந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

38. தேனை குளிர்ந்த நீரில் கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

39. கசகசா ,கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும். 

40. உடல் பலமும் முக வசீகரமும் அழகும் பெற பத்து தூதுவளை பூவை பாலுடன், சர்க்கரையும் சேர்த்து அருந்தி வர முக வசீகரமாகும் அழகும் கூடும் .

41. அடிக்கடி கோஸ், கேரட், தக்காளி பச்சையாக சாப்பிட்டு வர முகத்தில் சுருக்கம் மறையும்.
42.  வெந்தய கீரையை சாம்பார் கூட்டு செய்து சாப்பிட்டு வர ரத்த கொதிப்பு மட்டுப்படும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை