கொழுப்பை கரைக்கும் கை மருந்து
நாள்தோறும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் சூடு தணிவதுடன் கொழுப்பும் கரையும்.
வாழைத்தண்டு சாரில் மிளகாய் 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நிழலில் காயவைத்து பொடியாக்கி இதனை உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து விடும்.
2 லிட்டர் தண்ணீருக்கு ஒரு மேசை கரண்டி சீரகம் என்ற விகிதத்தில் கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீருக்கு பதிலாக இதை குடித்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு தாங்காது .
இஞ்சியின் தோல் நீக்கி ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடித்து 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.
கொள்ளுடன் சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.