ஆரோக்கியப் பிரச்சனைகளில் இருந்து உடலை பராமரிப்பதற்கு எண்ணெய் குளியல் சிறந்த முறையாகும். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் வாத, பித்த, கபதோஷங்கள் சீராகும். உடல் உள் உறுப்புகளின் இயக்கம் சீராகும். உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தவும் முடியும்.
நன்மைகள்
✓தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது மூளையில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு, உடல் முழுவதும் வெப்பத்தையும், ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
✓மன அழுத்தத்தை குறைத்து உடல் உள் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்பட உதவும்.
✓முடி உதிர்வை குறைக்கும்.
✓பார்வைத் திறனை மேம்படுத்தும்.
✓ சருமத்தை பொலிவாக்கும்.
✓ உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
✓ மூட்டுகளில் இணைப்பில் உள்ள தேய்மானத்தை குறைக்கும்.
குளிக்கும் முறை
∆பண்டிகை நாட்கள் , முக்கிய நிகழ்வுகள் தவிர வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
∆உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணை தேய்த்து, அரை மணி நேரம் வரை காலை நேர இள வெயிலில் நின்று , பின் மிதமான சூடு தண்ணீரில் குளிக்கலாம் .
∆உடலில் தேய்க்கும் போது மூட்டுகளில் வட்ட வடிவிலும், உடல் உறுப்புகளில் மென்மையாகவும் தேய்க்க வேண்டும் .
∆எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம்.
∆எண்ணெயுடன் இரண்டு பூண்டு , ஐந்து மிளகைச் சேர்த்து 30 வினாடிகள் வரை அடுப்பில் சூடுபடுத்தி தேய்த்து குளித்தால் குளிர்ச்சியால் ஏற்படும் உடல் உபாதை தவிர்க்கலாம்.
செய்யக்கூடாதவை
✓எண்ணெய் தேய்த்துக் குளித்த தினம் அன்று பகல் வேளையில் தூங்கக் கூடாது.
✓ குளிர்ந்த உணவு, குளிர்பானம், குளிர்ந்த நீர் குளிர்ச்சியை ஏற்படுத்தும் வாழ்வியல் முறை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
Super
பதிலளிநீக்கு