சமையல் சிலிண்டர் கவனம்
இந்த காலத்தில் நகரம் மட்டும் இல்லாமல் கிராமங்களிலும் சிலிண்டர் அடுப்பினை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர் .
என்னதான் நாம் நாகரிகத்திற்கு மாறி வந்தாலும் சிலிண்டர் அடுப்பு குறித்த பாதுகாப்பு முறைகள் பற்றி பலருக்கு தெரிவதில்லை.
இதனால் சிலிண்டரினால் ஏற்படும் பாதிப்புகளோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
காரணம் நம்முடைய கவனக்குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.
வீட்டில் சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்தும் போது அது எப்படி பயன்படுத்த வேண்டும் விபத்துக்கள் ஏற்படாமல் எப்படி பாதுகாக்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
1. சிலிண்டரை முதலில் வாங்கியதும் ரப்பர் ட்யூப் சிலிண்டர் வால்வின் உட்புறத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் .
2. சிலிண்டரை காற்றோட்டமான பகுதியில் உயரம் சமமான பகுதியில் தலையில் செங்குத்தாக வைக்க வேண்டும்.
3. வெப்பம் மிகுந்த பொருட்கள் மற்றும் விரைவில் தீப்பற்றும் பொருட்களான எண்ணெய்களை சிலிண்டரின் அருகில் வைக்கக்கூடாது.
4. சிலிண்டரில் கசிவு ஏற்படுவது போல தென்பட்டால் உடனே சோப்பு நீரில் கொண்டு பரிசோதிக்க வேண்டும்.
5. சமையல் முடிந்தவுடன் எப்போதும் சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பான மூடியை கவனமாக மூடி வைக்க வேண்டும்.
6. பிரிட்ஜ் போன்ற மின் சாதன பொருட்களை சமையல் அறைக்குள் வைக்கக்கூடாது. ஏனெனில் மின் சாதன பொருட்களால் ஏற்படும் மின் அழுத்தத்தின் ஏற்றத்தாழ்வுகள் கியாஸில் கசிவை ஏற்படுத்தும்.
7. சிலிண்டர் டியூபில் விரிசல்கள் ஏற்படுகிறதா? என்பதை பரிசோதித்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் ட்யூபை மாற்றிவிட வேண்டும்.
8. திடீரென சிலிண்டர் கசிவு ஏற்பட்டால், சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூடிவிட்டு அந்த அறையில் மின் சுற்றுகள் மற்றும் சாதனங்களை இயக்காமல் நமது வீட்டின் வெளிப்புறம் உள்ள மின் இணைப்பு சப்ளைகளை துண்டித்து விட வேண்டும்.