குளியல் அறையில் படிந்திருக்கும் உப்பு கரையை போக்கும் வழிகள்
வீட்டை சுத்தப்படுத்தும் வேலைகளில் சிரமமானது குளியல் மற்றும் கழிவறைகளில் படிந்து இருக்கும் உப்பு கரையை நீக்குவது தான்.
சுவர் மற்றும் தரைப்பகுதிகளில் படிந்து இருக்கும் கருப்பு நிற கரைகள் நமக்கு மட்டுமின்றி வீட்டுக்கும் ஒரு உறவினர்களையும் முகம் சுளிக்க வைக்கும்.
இந்த கரைகளை நீக்குவதற்கு ரசாயனங்களை பலரும் பயன்படுத்துவார்கள் .
ஆனால் அவை நாளடைவில் தரைக்கும் சுவருக்கும் பாதிப்பை உண்டாக்கும்.
அதுமட்டுமில்லாமல் இந்த ரசாயனங்கள் தோல் மற்றும் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் .
ஆகையால் இயற்கையான பொருட்களை உபயோகித்து உப்பு கரைகளை நீக்கும் சில வழிகளை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சீயக்காய் தூள் - மூணு தேக்கரண்டி
புளித்த தயிர் அல்லது புளித்த மாவு - நான்கு தேக்கரண்டி
சாம்பு - இரண்டு தேக்கரண்டி
ஒரு கிண்ணத்தில் சீயக்காய் தூள் புளித்த தயிர் அல்லது மூன்றையும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலக்கவும்.
இதற்கு எந்த வகையான சீயக்காய் தூள் மற்றும் சாம்பு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இந்த கரைசலை கரை படிந்துள்ள இடத்தில் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
பின்பு பிரஸ் அல்லது தேங்காய் நாரை கொண்டு அந்த இடத்தில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும்.
இதன் மூலம் உப்பு கரையை முழுமையாக நீக்கும்.
டைல்ஸ் மார்பில் என எல்லா வகையான தரையிலும் பயன்படுத்தலாம்.
இந்த கரைசலை கொண்டு சமையல் அறை சிங்க் மற்றும் மேடையின் மீது படிந்திருக்கும் அழுக்கையும் அகற்றலாம்.
இயற்கையான பொருட்களை உபயோகிப்பதால் உடல் நலனுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.