கால் ஆணி குணமாக எளிய வழிகள்
காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும், உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் இந்த நோய் பலருக்கும் வருகிறது.
காலில் ஆணி வந்து விட்டால் பாதத்தை தரையில் வைக்க இயலா வண்ணம் வலியை ஏற்படுத்தும்.
குறைத்த அளவு காலடிகள் அணிவது உட்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு வலியை தருகிறது.
பாதத்தில் சிறு கொப்பளங்கள் போல் உண்டாகுவதை தான் கால் ஆணி என்கிறோம்.
கால் ஆணி உடையவர்களின் காலணிகளை அணிவதன் மூலமும் கால் ஆணி பரவ வாய்ப்புள்ளது.
காலுக்கு பொருந்தாத செருப்புகளை பயன்படுத்துவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி வரும்.
தோல் தடித்து வலி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை கால் ஆணி உள்ள இடங்களில் தடவி வர வேண்டும்.
இரவு பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டு போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம்.
இது போல் ஒரு வாரம் செய்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும் .
மல்லிகை செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடலாம் .
இதனால் கால் ஆணி மேலும் பரவாமலும் இருந்த இடம் தெரியாமலும் போகும்.
சித்திரமூலம் வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைத்து தூங்குவதற்கு முன் கால் ஆணி மீது பூசி வர விரைவில் குணம் கிடைக்கும்.
சிலருக்கு கால் ஆணியால் புண் வரலாம்.
அதற்கு விளக்கெண்ணையில் மஞ்சள் தூள் கலந்து அதை தடவ கால் புண் குணமாகும்.
கால் ஆணியும் வராது.
ஐந்து கிராம் மஞ்சள், ஐந்து கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருந்தாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில் கடமாக வைத்து தடவி வர நல்ல நிவாரணம் தெரியும்.
வெற்றிலையை அரைத்து கால் ஆணி மீது வைத்து கட்டி வர ஆணி மறையும்.
நவீன மருத்துவத்தில் கால் ஆணிக்கென பல சிகிச்சைகள் வந்துவிட்டன .
எளிய வைத்தியமாக மேற் சொன்னதை பலன் அளிக்காத போது லேசர் சிகிச்சை உடன் கூடிய நவீன முறையில் கால் ஆணிக்கு நிரந்தர தீர்வு பெறலாம்.