நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்

நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்

1.  நன்றியுடன் இருப்பது

 பெரிய பங்களாவிலோ அல்லது குடிசை வீட்டிலோ வசித்தாலும் சரி பெரிய பதவியிலோ அல்லது சிறிய வேலையிலோ இருந்தாலும் சரி உங்களுக்கு இந்த வாழ்க்கை கிடைத்ததற்காக மனதார இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும் .

கடவுள் என்னை நன்றாக வைத்திருக்கிறார் என்கிற நன்றி உணர்வு எப்போதும் இருக்க வேண்டும்.

 வாழ்க்கையில்  இன்னும் இன்னும் வேண்டும் என்று எண்ணி ஏங்குவதை விட இருப்பதற்கு நன்றி பாராட்டும் போது நிம்மதி தானாக வரும் .

நன்றி உணர்வே வாழ்வில் பல ஏற்றங்களைத் தரும்.

 2. இந்த நிமிடம் தான் இனிமையானது 

மனிதர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு நிகழ் காலத்தில் வாழாமல் இருப்பது தான். 

எப்போதும் கடந்த காலத்தை பற்றிய ஏக்கத்தையும் , எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளையும் சுமந்து கொண்டே இருக்கிறார்கள் .

அப்படி இருப்பவர்களை நிகழ்கால சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது.

 இந்த நிமிடம் மிகவும் இனிமையானது. நான் இதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று நினைப்பவர்கள் நிம்மதியை அடைகிறார்கள்.

 3. பிறரை மதிப்பிடாமல் தவிர்ப்பது

ஒருவருடன் பழக ஆரம்பிக்கும் போதே அவரைப் பற்றி மதிப்பீடு செய்கிறார்கள் பலர்.

 அந்த அளவுகோலை மனதில் வைத்துக் கொண்டு அவருடன் பழக ஆரம்பிக்கிறார்கள் ஆனால் நம் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அவர் இல்லை என்னும் போது அவர் மேல் வெறுப்பு வருகிறது.

 எந்த மனிதரையும் மதிப்பீடு செய்வதில் அவசரப்படக்கூடாது.

 அவர்களுடைய நிலையிலிருந்து யோசிக்க வேண்டும் .அப்படி இருந்தால் தான் பிறகு நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

 4. காத்திருக்கும் பொறுமை வேண்டும்

 எந்த விஷயத்திலும் முன்னேற்றமோ வெற்றியோ கிடைக்கும் வரை பொறுமையாக காத்திருத்தல் அவசியம்.

 எந்த மனிதரும் வாழ்க்கையில் மிகக் குறுகிய காலத்தில் முன்னேறிட முடியாது .

நாம் ஆசைப்பட்டதை அடைய அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும் .

அதே சமயம் காலம் கனியும் வரை பொறுமையாக காத்திருத்தல் வேண்டும்.

 உடனே பலனை எதிர்பார்த்தால் நிம்மதியை இழந்து விடுவோம்.

 5. மகிழ்ச்சி மனதிற்குள் தான் இருக்கிறது 

நமக்கு மகிழ்ச்சியை பிறர் வழங்க முடியாது.

 அது நமக்குள் தான் இருக்கிறது.

 மாபெரும் மாளிகையில் வசிக்கும் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்ல முடியாது .

அது அவருடைய மனதிற்குள் இருந்து தான் வர வேண்டும்.

 எந்த நிலைமையில் இருந்தாலும் சரி, வாழ்க்கையில் என்ன கிடைத்தாலும் சரி, சந்தோஷமாக இருப்பேன் என்று தீர்மானம் செய்து கொள்ளும் நபர் எப்போதும் நிம்மதியாக இருக்கிறார்.

 நான் மகிழ்ச்சியாக வாழ இதெல்லாம் வேண்டும் என்று பெரிய பட்டியல் போடும் மனிதரால் எந்த நாளும் நிம்மதியாகவோ ? சந்தோசமாகவோ ? வாழ முடியாது.

 6.  ஒவ்வொரு நாளும் புதிய நாளே

பள்ளிக்கு செல்லும் குழந்தை ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களை எதிர்பார்க்கும்.

 அதுபோல வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடம் தினம் புதிய, புதிய அனுபவங்களையும் புதிய பாடங்களையும் தரும் .
அதே சமயம் தேவையான வாய்ப்புகளை வழங்கி முன்னேற்றத்தையும் தரும் இது எல்லாம் இயல்பாக இருப்பவர்களால் நிம்மதியாக இருக்க முடியும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை