தேக அழகை தேடித் தரும் தேங்காய் நீர்
தேங்காய் நீர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் ஏற்றதாக திகழ்ந்து வருகின்றது.
தேங்காய் தண்ணீர் பல்வேறு ஆரோக்கியமான பண்புகளை கொண்டுள்ளது .
இது ஒமேகா-3 , கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் சி, என்சைம்கள், அமினோ அமிலங்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களால் நிறைந்துள்ளது.
இதில் இயற்கையான எலக்ட்ராே லைட்களும் அதிகமாக இருப்பதால் தேங்காய் நீர் உடலின் ஈரப்பதத்திற்கு மிக சிறந்த மருந்து.
மேலும் சருமம் , கூந்தல் இவற்றின் ஆரோக்கியத்திலும் தேங்காய் நீரை எவ்வாறு பயன்படுத்தலாம்.
முடி பலருக்கும் பெரும் இன்னலாக மாறிக்கொண்டிருக்கிறது.
அரைக்கப் தேங்காய் நீருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலை முடியின் வேர்க்கால்கள் துவங்கி நுனிவரை தடவி நன்கு மசாஜ் செய்யவும். பின்னர் ஷாம்பு அல்லது சீயக்காயுடன் அலச வறண்ட முடிக்கு போசாக்கு கிடைக்கும்.
மேலும் முடி உதிர்வும் நாளடைவில் குறைந்து பொது முடி வளர துவங்கும்.
சருமம்
சருமத்தை பிரகாசமாக தேங்காய் நீரை பயன்படுத்தலாம்.
மஞ்சள் உடன் தேங்காய் நீரை கலந்து பேஸ்ட் ஆக கலக்கவும். பின்னர்
கலவையை மென்மையாக்க இன்னும் சிறிது தேங்காய் நீர் சேர்க்கவும்.
இதை உங்கள் முகத்தில் தடவி பின் 10 நிமிடத்திற்குப் பிறகு முகத்தை கழுவினால் பிரகாசமான சருமம் கிடைக்கும்.
இந்த முறையில் வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்துடன் பளபளக்கும் புத்துணர்ச்சியான சருமம் பெறலாம்.
தோல்
தேங்காய் நீரை பருத்தி பஞ்சால் நனைத்து உடலின் மேல் தடவி குளிக்க வறட்சி நீங்கி இயற்கையான பளபளப்பு கிடைக்கும் .