வீட்டுக் குறிப்புகள்
வீட்டு அறைகளில் துர்நாற்றம் வீசினால் சில நெருப்பு குச்சிகளை கொளுத்தி கையில் பிடித்துக் கொண்டால் போதும் துர்நாற்றம் போய்விடும் .
ஸ்குரு டிரைவர் ஆணிகள் கத்தரிக்கோல் சாமான்கள் வைத்திருக்கும் டப்பாவில் ஒரு பெரிய கற்பூரவள்ளியை போட்டு வைத்தால் அந்த சாமான்கள் துருப்பிடிக்காது.
குக்கரில் ரப்பர் வளையம் தளர்ந்து விட்டால் அதை பிரிட்ஜிலோ ? குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையிலோ ? சில நாட்கள் வைத்து உபயோகப்படுத்தினால் பழைய நிலையை போன்று இறுக்கம் ஆக்கிவிடும்.
சிறிய கடுகை ஊற வைத்து பேஸ்ட் போல் அரைத்து அதில் பாத்திரம் தேய்த்தால் கரை மறையும் .
இட்லி தோசை மாவு பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவினால் எவர்சில்வர் பாத்திரத்தை தேய்த்தால் பாத்திரங்கள் பள பளவென்று இருக்கும் .
வெந்தய குழம்பு செய்யும்போது இரண்டு சிட்டிகை பருப்பு பொடியை போட்டால் குழம்பு மணமாய் இருக்கும்.