ஏழைகளை விட பணக்காரர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்
இதெல்லாம் பணக்காரர்களுக்கான நோய் என்ற சொல்லாடலை அறிந்திருப்போம்.
ஆரம்ப கட்டத்தில் நீரழிவு குறைபாட்டை கூட பணக்காரர்களுக்கான நோய் என்று கூறினார்கள் .
ஆனால் அது இப்போது பாரபட்சமில்லாமல் அனைவரையும் பாதிக்கும் நோயாக உள்ளது.
பொதுவாக செல்வந்தர்களை விட ஏழைகளே அதிக நோய்களுக்கு உள்ளாகிறார்கள் என்று பரவலாக நம்பப்படுகிறது.
இதற்கு சூழல் உட்பட பல காரணங்கள் சொல்லப்படுவதுண்டு .
ஆனால் ஏழைகளை விட பணக்காரர்களுக்கு மரபணு ரீதியாக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்று ஐபிஎல் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வும் தகவலும் பின்லாந்தின் ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின் சமூக பொருளாதார நிலை மற்றும் பல்வேறு நோய்களுக்கு இடையே ஆன தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதற்காக 35 முதல் 80 வயது உடைய இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பின்லாந்து குடிமக்களின் சுகாதாரத் தரவு சமூகப் பொருளாதார நிலை மற்றும் மரபணு ஆகியவற்றை ஆராய்ச்சி குழு சேகரித்தது .
மார்பக புற்றுநோய் ஏழைகளை விட பணக்காரர்களுக்கு மரபணு ரீதியாக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது .
மேலும் பணக்காரர்களுக்கு மார்பகம் பிரோஸ்டேட் மற்றும் பிறவகை நோய்களுக்கான மரபணு ஆபத்து அதிகமாக உள்ளது என தெரியவந்துள்ளது.
அதுவே குறைவான வசதி படைத்தவர்களில் அதிகம் பேர் மனசோர்வு, குடிப்பழக்கம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உடன் நீரழிவு மற்றும் மூட்டு வலி ஆகியவற்றால் மரபணு ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர் .
நோய்க்கும் சமூக பொருளாதார நிலைக்கும் தொடர்புண்டு.
பெரும்பாலும் பாலினம் வயது அடிப்படை மக்கள் தொகை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான நோய் பாதிப்புகள் குறித்து மருத்துவ ஆய்வு முன் கணிப்பு மாதிரிகளில் ஆய்வு செய்யப்படும்.
ஆனால் மரபணு தகவல்களை சமூகப் பொருளாதார நிலையோடு இணைத்து ஆய்வு செய்வது முக்கியமான முதல் படி என்று மருத்துவர் ஹேகன்பீக் கூறியுள்ளார் .
அவர் கூறுகையில் நோய் அபாயத்தின் மரபணு முன் கணிப்பு ஒரு தனி நபரின் சமூக பொருளாதார பின்னணியை பொறுத்தது என்பதை நம்மால் வெளிப்படுத்தி காட்ட முடியும்.
எனவே நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு மரபணு தகவல்கள் மாறாது என்றாலும் நமக்கு வயதாகும் போது அல்லது நமது சூழ்நிலைகளை மாற்றும்போது நோய் அபாயத்தில் மரபணுவின் தாக்கம் மாறுகிறது என்று கூறினார் .
இந்த ஆய்வை தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் தற்போது குறிப்பிட்ட தொழில்கள் மற்றும் நோய் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையே ஆன தொடர்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.