பட்டுச் சேலைகள் பராமரிப்பு
பட்டு துணிகளை சோப்பு போட்டு துவைக்க கூடாது .
கடலைமாவை நன்கு கரைத்து அதில் பட்டு துணியை ஊற வைத்து கசக்கினால் அழுக்கு போய்விடும்.
பட்டுப் புடவைகளை பிளாஸ்டிக் கவர்களில் வைத்தால் அலமாரியின் இரும்பு கரை படாமல் இருக்கும்.
பட்டுப் புடவைகளுக்கு இஸ்திரி போடும்போது அதிக உஷ்ண நிலையில் இல்லாமல் மிதமான சூட்டில் வைத்து இஸ்திரி செய்ய வேண்டும்.
ஜருகையை உட்புறமாக இருக்குமாறு மடித்து வைத்தால் கறுத்து போகாது.
வெளியில் கட்டிக் கொண்டு போன பிறகு உடனே மடித்து வைக்க கூடாது. இரண்டு மணி நேரமாவது காற்றாட கொடியில் உலர்த்த வேண்டும்.
நாப்தலின் உருண்டைகளை பட்டுப் புடவையில் வைத்து மடித்தல் நல்லது.
பட்டுப்புடவைகளை வெயிலில் உலர்த்த கூடாது நிழலில் தான் உலர்த்த வேண்டும்.
பட்டுப் புடவைகளை அதன் பின்பு புறத்தில் தான் இஸ்திரி செய்ய வேண்டும். ஜருகையை பாதிக்காத வண்ணம் இஸ்திரி செய்ய வேண்டும்.
பட்டுப் புடவையில் காபி, டீ மற்றும் ஏதேனும் கரை ஏற்பட்டால் பொதைக்ஸ் பவுடரை தண்ணீரில் கரைத்து துணியை சிறிது நேரம் ஊற வைத்து பின் அதில் துணியை அலசி எடுத்து பிழியாமல் புடவையில் உள்ள நீரை வடிய விட்டு காய வைத்தால் கரை போயே போச்சு.