வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
காலையில் நாம் சாப்பிடக்கூடிய உணவு நம் உடலுக்கும், உள் உறுப்புகளுக்கும் அந்த நாள் முழுவதும் ஆற்றலும், பூத்துணர்ச்சியும் அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் டீ, காபி அருந்துவதை முற்றிலும் தவிர்த்தால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணரலாம் .
வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதால் வயிற்றில் அமில தன்மையை உண்டாக்கி கார செரிமான கோளாறை ஏற்படுத்தும் .
இதற்கு பதிலாக இளம் சூடான நீரை அருந்தலாம்.
இது உடலுக்கு பல நன்மைகளை தரும்.
பொதுவாக புளிப்பான பழங்களில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும்.
அதை நாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரப்பையில் அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஏற்படுத்தும்.
பொதுவாக காலையில் வெறும் வயிற்றில் இனிப்பான பண்டங்களை சாப்பிடுவதை அறவே தவிர்ப்பது நல்லது.
இனிப்பு சாப்பிடுவதால் உங்கள் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரித்து நீரழிவு நோய்க்கு வழி வகுக்கும்.
அதேபோல தக்காளியில் டானிக் அமிலம் இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்கலாம் .
ஆகவே காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
ஐஸ் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் .
இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் இயக்கத்தை குறைக்கும்.
இதனால் உடலின் சுறுசுறுப்பு குறைந்து மந்த தன்மை ஏற்படும்.
வெயிறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்டால் வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் ரத்தத்தில் அதிகமாக கலக்க நேரிடும்.
பொதுவாக பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவது செரிமானத்துக்கு நல்லதல்ல.