துளசி குடிநீர்
ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அதனுடன் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
ஆறிய பின் குடிக்கவும்.
இதை தினமும் குடித்து வந்தால் பல வகையான நோய்கள் குணமடையும்.
சளியால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இந்த பானத்தை குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
ஆஸ்துமா பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும் .
அதிகாலையில் வெறும் வயிற்றில் இதை குடித்து வந்தால் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் .
தினமும் துளசி பானத்தை காலையில் குடித்து வந்தால் நரம்புகள் வலுவடைந்து மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும்.
சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியை தடுக்கும் .
வாயு மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களை குறைத்து அல்சர் பிரச்சனைகளை தடுக்கிறது.
செரிமான பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.