அழகிய கன்னங்களுக்கு

அழகிய கன்னங்களுக்கு

அழகு என்பது எல்லோருமே விரும்பக்கூடிய ஒரு விஷயம் .

அழகுக்கு அழகு சேர்ப்பது குண்டு குண்டு கன்னங்கள் தான்.

 பலரைப் பார்த்து நாம் பொறாமைப்பட்டு இருப்போம் .

எப்படி இருக்கு பாருங்க கன்னம் புசுபுசுன்னு .

ஏன் உங்க கன்னம் அதேபோல ஆகலாம். ஆக்க முடியும்.

 இதற்கு இந்த ஆறு டிப்ஸ் போதும்.

 1. ஆப்பிள் மற்றும் கேரட் துண்டுகளை அரைத்து ஜூஸாக எடுத்துக்கொண்டு அதில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கன்னத்தில் சதை போட்டு கொழு கொழு கன்னங்களை பெறலாம்.

 2. ஆப்பிளை தோல் சீவி நன்கு அரைத்து அதை கன்னத்தில் எல்லா பகுதியிலும் வாரம் மூன்று முறை பேசியல் செய்து வருவதால் குண்டான கன்னங்களை பெறலாம்.

 3. தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் சர்க்கரை கலந்து அதை கன்னங்களில் பேசியல் செய்து வர ஒட்டிய கன்னங்கள் குண்டாகும்.

 4. பப்பாளியுடன் தேன் கலந்து அதை கன்னத்தில் நன்கு மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும் இதுபோல் செய்து வந்தால் குண்டான கன்னங்களை பெறலாம்.

 5. ஒரு ஸ்பூன் பால் மற்றும் ஒரு ஸ்பூன் வெண்ணெய் இவற்றுடன் பார்லி தூள் சேர்த்து நுரை வரும் வரை நன்கு கலந்து பின் அதை முகத்தில் தடவி பத்து நிமிடம் வைத்திருந்து பின் கழுவ வேண்டும் இப்படி செய்து வந்தால் காெழு காெழு கன்னம் கிடைப்பதோடு முகம் பொலிவு பெறும்.

 6. காலையில் எழுந்ததும் வாயுக்குள் காற்றை நிரப்பி கொண்டு அந்த காற்றை மெதுவாக விடுவது போல் தினமும் 10 முறை செய்து வந்தால் ஒட்டிய கண்ணம் குண்டாக மாறும்.
 மேற்கூறியவற்றை செய்துவிட்டு பிறகு நீங்களே உங்கள் கன்னத்தை கிள்ளி பார்ப்பீர்கள் ஆஹா எவ்வளவு அழகு என்று.

கருத்துரையிடுக

புதியது பழையவை