போனுக்கு அடிமையாகாதீர்கள்
ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து இருப்பது மனிதர்களுக்கிடையே உள்ள உறவை கெடுத்து இடைவெளியை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் கூட நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார்கள் என ஒரு ஆய்வு சொல்கிறது.
குழந்தைகளிடம் விளையாட்டுப் பொருளாக கொடுக்கும் ஸ்மார்ட்போனை அரைமணி நேரத்திற்கு மேல் வைத்திருக்க விடக்கூடாது.
போனை பிளைட் மோடில் போட்டு விட்டு கொடுப்பது நல்லது .
வீட்டுக்கு யாரும் உறவினர்கள் வந்தால் கூட அவர்களை கண்டு கொள்ளாமல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பழக்கம் அதிகம் பேருக்கு இருக்கிறது.
இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
எந்த உபகரணத்தையும் அளவோடு பயன்படுத்தினால் ஆபத்துகளை தவிர்க்கலாம்.
ஸ்மார்ட்போனை ஒரு நாளில் எத்தனை மணி நேரம் தான் பயன்படுத்த வேண்டும் என வரையறை வைத்துக் கொள்ளுங்கள் .
10 நிமிடத்திற்கு ஒருமுறை எடுத்து பார்க்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள் .
படுக்க அறையில் மறந்தும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாதீர்கள்.
அதிக நேரம் ஸ்மார்ட்போனில் பேசுவது உடலுக்கு மட்டுமல்ல மூளைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் .
ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.
ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசலாம். நடந்து கொண்டே பேசலாம். பேசும்போது முடிந்தவரை ஹெட் போனை பயன்படுத்தவும்.
படுக்க செல்லும் வரை மொபைல் போனை உபயோகிப்பதற்கு தூக்கம் வருவது இயல்பை விட ஆறு நிமிடங்கள் தாமதம் ஆகிறது .
ஆழ்ந்த தூக்கத்தையும் பல நிமிடங்கள் மொபைல் போன் தடுக்கிறது .
படுக்கை செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே மொபைல் போனை பார்ப்பதை தவிர்க்கவும்.
படுக்கையில் இருந்து போனை நீண்ட தூரம் தள்ளி வைக்கவும்.
காலை எழுந்தவுடன் தலைவலி வருகிறது ,காது சூடாகுவது போல இருக்கிறது , காதுகளில் இரைச்சல் இருக்கிறது, கனவுகளில் கூட ஸ்மார்ட் போன் தொடர்பான சம்பவங்கள் வருகின்றன என்றால் போனுக்கு அடிமையாக இருப்பதாக அர்த்தம். உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
போனை தினமும் கொஞ்ச நேரம் அணைத்து வைத்துவிட்டு யோகா, இசை கேட்டல் , புத்தகம் படித்தல், உடற்பயிற்சி செய்தல், தோட்ட வேலைகளை பார்த்தல் என செய்து வந்தாலே இந்த பிரச்சனை ஏற்படாது.