பொடுகு பிரச்சனையா?
பொடுகு காரணமாக தலையில் அரிப்பு ஏற்படும்.
முடி உதிர்வுக்கு பொடுகும் ஒரு காரணம் .
தலையின் சருமத்தை சேதாரம் செய்வதில் முக்கிய பங்கு பொடுகுக்கு உண்டு.
இதில் இரண்டு வகையான பொடுகுகள் உள்ளன .
ஒன்று வெள்ளை பொடி போல் சோல்டர் உட்பட உதிரும்.
மற்றொன்று கிட்டத்தட்ட மெழுகு பாணியில் தலையில் ஒட்டிக் கொள்ளும்.
பொடுகு பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு சில வழிகள் இதோ:
மருதாணி இலையை அரைத்து சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால் பொடுகு நீங்கும்.
தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பொடுகு காணாமல் போகும்.
தேங்காய்ப்பால் எடுத்து அதை கைகளில் ஊற்றி நன்கு தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து மிதமான சூடு நீரில் அலசினால் பொடுகு மறையும்.
தயிர், முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி பிறகு சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு இருக்காது.
முதல் நாள் சாதம் வடித்த கஞ்சியை மறுநாள் அதை தலையில் ஊற்றி தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
மிளகுத்தூளுடன் பால் சேர்த்து அதை தலையில் சில நிமிடங்கள் ஊறவைத்த பின் குளித்தால் பொடுகு போகும்.
துளசி, கருவேப்பிலை இரண்டையும் அரைத்து எலுமிச்சை பழ சாறுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
வேப்பிலை கொழுந்து, துளசி இரண்டையும் மை போல் அரைத்து அதை தலையில் தேய்த்து பிறகு சிறிது நேரம் விட்டு குளித்தால் பொடுகு விலகும்.
வசம்பை பவுடர் ஆக்கி தேங்காய் எண்ணெயில் நன்கு ஊற வைத்து பிறகு தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
குளித்து முடித்து கடைசியில் குளிக்கும் தண்ணீரில் வினிகர் கலந்து குளித்தால் பொடுகு போகும்.
நெல்லிக்காய் தூள், வெந்தய பொடி, தயிர், கடலை மாவு ஒன்றாய் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.
வாரம் ஒரு முறை செய்து வந்தால் பொடுகு வராது.
தலையில் கொஞ்சம் தயிர் விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.