எண்ணெய் வழியும் சருமத்திற்கு எட்டு டிப்ஸ்
ஒன்று தக்காளி பழச்சாற்றை முகத்தில் பூசி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் தன்மை கட்டுப்பட்டு விடும்.
தக்காளியுடன் வெள்ளரிப்பழத்தை அல்லது பேரிட்சை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும் முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்கிவிடும் .
இரண்டு எண்ணெய் தன்மையையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் சந்தனம் அரைத்து பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும் .
மூன்று சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவினால் முகத்தில் எண்ணெய் தன்மை நீங்கும்.
நான்கு வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் சுரக்கும் எண்ணெய்யானது கட்டுப்படும் .
வெள்ளரிச் சாறுடன் பால் பவுடரை கலந்து பூசினாலும் எண்ணெய் தன்மையின்றி முகம் பிரகாசமாக காணப்படும்.
ஐந்து எண்ணெய் தன்மையுள்ள சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும் .
முகத்தை கழுவ சோப்புக்கு பதிலாக பயத்தம்மாவு பயன்படுத்தலாம்.
எண்ணெய் தன்மை குறைவதோடு முகமும் பளபளப்பு ஆகும்.
ஆறு பால் மற்றும் முட்டையின் வெள்ளை கருவுடன் கேரட் துருவலை கலந்து முகத்தில் பூசினால் எண்ணெய் சுரப்பது குறைந்து விடும்.
மேலும் கேரட்டால் பொன் நிறமான சருமம் கிடைக்கும்.
ஏழு வெள்ளரிச்சாறு, எலுமிச்சை சாறு, சந்தன பவுடர் , தயிர், பாதாம் பவுடர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்கு பின் குளிர்ந்த நீரில் கழுவ எண்ணெய் பசை முகத்திற்கு குட்பை சொல்லலாம்.
எட்டு கஸ்தூரி மஞ்சள் சந்தனம் சேர்த்து முகத்தில் தடவ எண்ணெய் பசை மறைவதோடு எண்ணெயால் உண்டாகும் பருக்களும் சேர்ந்து சரியாகும்.