பெட்ஸ் ஜாக்கிரதை
செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான எச்சரிக்கைகள் :
பெருநகர சென்னை மாநகராட்சி விதிகளின்படி செல்லப் பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் அதற்கான உரிமம் பெட் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும் .
அதை வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கவும் வேண்டும் .
திரு வி கா நகர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் மற்றும் கண்ணம்மா பேட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் செல்லப்பிராணிகளின் சிகிச்சை மையங்களில் வழங்கப்படுகிறது.
இதனை தினசரி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து அம்மையங்களில் பெறலாம் .
நாய், பூனை, கிளி, புறா, லவ் பேர்ட்ஸ், மீன் , முயல், குதிரை, வாத்து போன்ற பிராணிகளைச் செல்லப் பிராணிகளாக பெட்ஸ் அனிமலாக வளர்க்கலாம் .
பெட் அனிமல்ஸ் வளர்ப்பதால் நம்முடைய மன அழுத்தம் வெகுவாக குறைவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அது மட்டுமல்ல ஒரே குழந்தை உள்ள வீடுகளில் அவை சிறந்த உறவாகவும் நல்ல பிரண்டாகவும் இருக்கிறது.
எந்த செல்லப்பிராணி வளர்த்தாலும் அது இருக்கும் இடத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
தினமும் வேலை தவறாமல் உணவு, நீரும் தர வேண்டும் .
மீனாக இருந்தால் நீர் வேண்டாம்.
நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகளாக இருந்தால் தினமும் வாக்கிங் கூட்டிச் செல்ல வேண்டும்.
பெட் டாக்டரிடம் கூட்டிச்சென்று தடுப்பூசி போட வேண்டும் .
நாய் வளர்ப்பதற்கு முன்பெல்லாம் சின்னதாக சிமெண்டாலோ, மரத்திலோ சிறியதாக வீடு போல கட்டிக் கொடுப்பார்கள்.
இப்போதெல்லாம் நாம் இருக்கும் படுக்கை அறையிலேயே நாயை வைத்து வளர்க்கிறார்கள்.
சரியாக சொன்னீர்கள்👍💐💐
பதிலளிநீக்கு