கர்ப்ப காலத்தில் உறங்கும் முறை
கர்ப்பம் தரித்தவுடன் பெண்கள் உடல் அளவிலும், மனதளவிலும் விழிப்புடனும் இருக்க அனைவரும் வலியுறுத்துவார்கள்.
கர்ப்ப காலத்தில் தூங்கும் முறை பற்றிய சில தகவல்கள்:
முதல் மூன்று மாதம்
கர்ப்பம் அடைந்து முதல் மூன்று மாதங்கள் கருவின் அளவு சிறியதாக இருப்பதால் படுத்து உறங்க சிரமமின்றி இருக்கும்.
நான்கு மாதங்கள் தொடங்கியதில் இருந்து முன்பு போல இயல்பாக படுக்க முடியாது. ஏனென்றால் கருவில் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கண்டிப்பாக குப்புற படுத்து தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
சாதாரணமாக குப்புற படுத்து தூங்குவது வழக்கம் என்பர். கர்ப்ப கால தொடக்கத்தில் குப்புற படுத்து தூங்க முடியாமல் சிரமப்படுவர்.
குப்பறப்படுப்பதால் கர்ப்பப்பையில் அழுத்தம் ஏற்படும்.
அதனால் கருவுக்கு பாதிப்பு உண்டாக வாய்ப்பிருக்கிறது ...
அதனால் அதை தவிர்ப்பது சிறந்தது.
அதுபோல மாதங்கள் கூட கூட அடிக்கடி புரண்டு படுப்பது நல்லதல்ல. எழுந்து உட்கார்ந்து திரும்புவது சிறந்தது .
நான்கு முதல் ஆறு மாதம் நான்காவது மாதத்தில் இருந்து தான் தாய்க்கும் குழந்தைக்கு இடையில் தொப்புள் கொடி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெறும் .
வயிறும் சற்று பெரியதாக இருக்கும்.
சிலருக்கு மல்லாந்து படுப்பது வழக்கம்.
கர்ப்ப காலத்தில் படுக்கும்போது கர்ப்பப்பை இரத்த குழாய்கள் எழுதுவதால் மூச்சுத் திணறல் மற்றும் ரத்த ஓட்டம் குறையவும் வாய்ப்புள்ளது.
படுக்கும் பொழுது நம்முடைய உடம்பில் உள்ள முதுகு மற்றும் விடுப்பு பகுதியில் அழுத்தம் உண்டாகும்.
கருப்பு பையில் இருக்கும் குழந்தைக்கு போதிய இடம் இல்லாமல் தவிக்க வாய்ப்பு உள்ளது.
குழந்தையினுடைய எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கும்.
சமயத்தில் மல்லாந்து படுத்தால் தாயின் குடல் பகுதி மீது அதிக அழுத்தம் ஏற்படும் .இதன் காரணமாக அஜீரண கோளாறுகளும். அசெளகரிகமும் உருவாகும் .
7 முதல் 9 மாதம் இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் தூங்கும் போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
மருத்துவர்கள் சொல்வார்கள்.
ஏனென்றால் நாம் அலட்சியமாக படுத்தால் கருவில் உள்ள குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் .
மேலும் குழந்தைக்கு கொடி சுற்றும் வாய்ப்புகளும் அதிகம் .
அதனால் கடைசி மூன்று மாதங்கள் அதிலும் முக்கியமாக ஒன்பதாம் மாதம் இடதுபுறமாக ஒரு கணித்து படுப்பது நல்லது.
உங்கள் வலது கை பக்கம் உறங்குவது உங்கள் கல்லீரல் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் பெரும்பாலமான மருத்துவர்கள் அதை தவிர்க்க சொல்வார்கள் .
அதை போல் பிரண்டு கூட புரண்டு படுப்பதை தவிர்த்து எழுந்து உட்கார்ந்து மறுபக்கம் திருப்பி படுப்பது தாய் சேய் இருவருக்கும் நல்லது .
சரியான முறை கர்ப்ப காலத்தில் உறங்குவதற்கு சரியான முறையை அறிந்து கொள்வதற்கான சில குறிப்புகளை காணலாம்.
பக்கவாட்டில் கொடுப்பது சிறந்த நிலை அவ்வாறு படுக்கும் பொழுது நமக்கும் சுமை என்று கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கும் சௌகரியமான இடம் இருக்கும் .
இடதுபுறம் சாய்ந்து படுப்பது ஏற்றது.
ஒரே புறம் படுத்து உறங்கும் பொழுது கை, தோள்பட்டை வலி வர வாய்ப்பு உள்ளது. அதனால் மற்றொருபுறம் திருப்பி படுக்கும்பொழுது எழுந்து மீண்டும் மற்றொருபுறம் படுக்க வேண்டும் .
ஒவ்வொரு முறையும் திரும்பிப் படுக்கும் பொழுது எழுந்து திரும்பி படுப்பது அவசியம் .
தூக்கத்தில் இவை எல்லாம் மிகவும் கடினமான செயல் இருப்பினும் இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைக்கு கொடி சுற்றாமல் இருக்கும் .
அதை போல் கால்களுக்கு இடையில் ஒரு மிருதுவான தலையணையை வைத்துக் கொள்ளலாம்.
பக்கவாட்டில் படுத்து உறங்கும் பொழுது வயிற்றுப் பகுதிக்கு அடியில் சப்போர்ட் இருப்பதற்கு ஏற்றார் போல போர்வை போன்ற துணியை வயிற்றுக்கு அடியில் வைத்து சப்போர்ட் கொடுக்கலாம் .
புதுதிலும் பெரிய தலையணையை ஒட்டி உறங்கும் பொழுது ரிலாக்ஸ் ஆக இருக்கும் .
உறக்கத்தில் மல்லாந்து படுத்து விடுவோமோ அல்லது குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ என்று அதிகம் பயம் கொள்ள வேண்டாம்.
எப்பொழுதுமே ஒரு விஷயத்தை பழகினால் நம்மை அறியாமலேயே தூக்கத்தில் கூட நாம் எழுந்து உட்கார்ந்து திரும்பி படுப்போம் .
பழகப் பழக நம்முடைய ஆழ்மனதில் பதிந்து விடும் மற்றும் இதெல்லாம் நம் குழந்தைக்கு ஆக தானே செய்கிறோம் என்று நினைக்கும் போது நாம் இன்னும் விழிப்புணர்வோடு இருப்போம்.
அதனால் தூங்கும் போது பயம் கொள்ளாமல் கூடுதல் கவனம் வைத்துக் கொண்டால் நிம்மதியான உறக்கம் தானாகவே வரும்.