ஆரோக்கியத்தை தரும் மஞ்சள் பூசணி
காய்கறி , பழங்கள் ,தானியங்கள் போன்றவை நமக்கு எப்போதும் பயன்படும் தாவரங்களாகும்.
முக்கியமாக காய்கறிகள் நமது வாழ்வோடு ஒன்றுவிட்டன.
இவைகள் நமது உணவு தேவையை நிறைவு செய்கின்றன, ஆரோக்கியத்தை அளிக்கின்றனர்.
மட்டுமின்றி பல்வேறு சத்துக்களை தந்து, வைட்டமின் குறைபாடுகளை நீக்குவதோடு ,பல நோய்களையும் தீர்க்கின்றன.
இங்கு காய்கறிகளில் ஒன்றான பூசணி பற்றி பார்ப்போம்.
பூசணியில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், சுண்ணாம்பு போன்ற சத்துக்கள் உள்ளன.
மேலும் வைட்டமின் சி, கரோட்டின் போன்றவை உள்ளன.
பூசணியிலிருந்து இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
பூசணி சதையிலிருந்து அல்வா தயாரிக்கப்படுகிறது.
பூசணி விதைகளில் இருந்து ஒரு வகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது.
இந்த எண்ணெய் நரம்பு டானிக்காக பயன்படுகிறது .
குணங்கள்
விஷம் இறக்கி, பூச்சிக்கொல்லி, நரம்பு வலுவூட்டி, வலிப்பு நீங்கி, குளிர்ச்சி ஊட்டி , புண்ணாற்றி ஆகிய குணங்கள் பூசணிக்கு உண்டு.
மருத்துவ பயன்கள்
பூசணி விதைகளை கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி வைத்துக்கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர பேன் ஒழியும்.
முடி வளரும்.
பூசணி சதையை மிக்ஸியில் இட்டு அடித்து தேவையான பால் சர்க்கரை சேர்த்து வந்த உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி பெறும்.
ஒரு கப் நீரில் ஒரு தேக்கரண்டி பூசணி சாறு கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வர வயிற்றுப்புண் குணமாகும்.
உணவு பாதியில் ஏற்படும் வீக்கல் குணமாகும்.
பூசணி சதையை சூடாக்கி பிசைந்து புண்கள் மேல் கட்டி வர புண்கள் ஆறும்.
பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர மலச்சிக்கல் தீரும்.
பூசணியின் விதைகளை பொடி செய்து ஒரு தேக்கரண்டி கொடியுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து இரவில் தின்று மறுநாள் காலை அரை தேக்கரண்டி விளக்கெண்ணெய் அறிந்த வயிற்றில் உள்ள நாடா புழுக்கள் ஒழிந்து விடும் .
பூசணிக்காய் சதையை அரைத்து புண்கள் மேல் தீப்பட்ட மற்றும் சுடுநீர் பட்ட காயம் மேல் பூசி வர புண்கள் ஆறிவிடும் .
பூசணி விதைகளை தூளாக்கி நீரில் குழைத்து பூச்சி, பூரான் கடித்து இடத்தில் பூசிட வலி, விஷம் இறங்கும்.
அடிக்கடி பூசணியை உணவில் சேர்த்து வர உடல் மடியும் .
உடல் சோர்வு களைப்பை நீக்கி சுறுசுறுப்பு ஊட்டும் .
இரத்த சோகை , சிறுநீர் கோளாறுகளை தீர்க்கும் .
நரம்புகளை வலுவூட்டி உறுதியளிக்கும்.
சிறுநீரை எளிதில் பிரிக்கும் மூல நோய்க்கு நல்ல மருந்தாகும்.