இயற்கையான அழகுக்கு
சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கருவளையத்தின் மீது தடவினால் கருவளையம் குறையும்.
கேரட்டை நன்றாக துருவி போட்டு அதில் தேன் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
மருதோன்றி காயை அரைத்து நகத்தில் தடவி வந்தால் நகம் வளரும்.
சந்தனத்தை நன்றாக பொடியாக்கி அதனுடன் பன்னீர் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
வெள்ளரிக்காயை நன்கு மைய அரைத்து கரும்புள்ளிகள் மீது தடவி வைத்து நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
கசகசாவை சிறிது எடுத்து பாலில் ஊற வைத்து அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு குறையும்.
செம்பருத்தி இலையை அரைத்து சீயக்காய் தூள் உடன் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வர தலையில் பொடுகு குறையும் .
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சாற்றை தலையில் தேய்த்தால் முடி உதிர்வது குறையும்.
தினமும் பசு வெண்ணையுடன் கருவேப்பிலை பொடியையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இளநரை குறையும்.
ஆலிவ் எண்ணெயை தலையில் தேய்த்து குளித்து வந்தால் கூந்தல் மின்னும்.
முளைகட்டிய கருப்பு கொண்ட கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
தேங்காய் பால் தடவி குளித்து வந்தால் நாள் அடைவில் செம்பட்டை முடி சரியாகும்.
பப்பாளி பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.
துளசி இலைச்சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.
வாழைப்பழத் தோலை லேசாக சூடு படுத்தி கண் மேல் கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.
உதட்டில் வெண்ணை தடவி வந்தால் சைனிங்காக இருக்கும்.
நகங்களில் சிதைவு ஏற்படாமலும் வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணையை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.
பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
முட்டையின் வெள்ளைக்கரு, தேன், மாதுளை, ஜூஸ் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் முகத்தில் பூசி விட்டு முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.
பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர முகம் பளபளப்பு ஆகும்.