குழந்தை வளர்ப்பு எனும் கலை
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலை கீரையை எடுத்து பொடி பொடியாக அரிந்து வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.
வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாக செய்து கடித்து சாப்பிட கொடுக்க வேண்டும் .
பசும்பாலை விட அதிக சக்தி வாய்ந்தது தேங்காய் பால்.
சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதை தவிர்க்க வேண்டும். பெருக்கும் பொழுது எழும் தூசியால் குழந்தைகளை தும்பல் , இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களை தாக்கக்கூடும்.
வீட்டில் சின்ன குழந்தைகள் இருந்தால் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலை கலந்து வைத்து அதன் மூடியில் நான்கு ஐந்து துவரா துவாரங்கள் போட்டு தேவைப்படும்போது அப்படியே தெளித்து துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.
டிராமா , சினிமா போன்ற நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரங்களில் சிறிய குழந்தைகளுடன் செல்லும்போது டிபன் பாக்ஸில் உணவை எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம். இதனால் குழந்தைகள் சாப்பிடாமல் உறங்கி விடுவதை தவிர்க்க முடியும் .
உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் ட்ரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதில் உள்ள பாஸ்பேட், கால்சியம் சத்தை உடல் கிரகித்து கொள்ளும் திறனை இழக்கிறது.
வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்து விட்டால் எறும்பு கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.
பாலில் தேன் கலந்து வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும் , சரியாகவும் அமையும்.
கைக்குழந்தை தூங்கும் போது பகலில் ஈ தொல்லை மிகவும் அமைதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையை சுற்றி ஐந்தாறு புதினா இலைகளை கசக்கி போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.
குழந்தைகளுக்கு இரவு பேரிச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும் .மூளை பலப்படும்.
குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிற புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளி விடுவது போல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளை சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகும் சுத்தமாகவும் . நகம் வெட்ட முடியும்.
குழந்தை அழும்போது காது பக்கம் கையை கொண்டு போய் வைத்து விட்டால் அது காது வலியினால் இருக்கும்.
வீட்டில் குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டையில் புண் வருகிறதா? உங்கள் வீட்டில் நாய் பூனை பறவை ஏதேனும் வளர்க்கிறீர்களா? அப்படியானால் மிருக வைத்தியரிடம் அப்பிராணிகளை பரிசோதித்து பார்க்கச் சொல்ல வேண்டும்.
பல நேரங்களில் வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்து குழந்தைகளுக்கு தொண்டைப்புண் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
குழந்தைகளுக்கு காதில் சீழ் வடிந்தால் உடனே கவனியுங்கள் பேசாமல் விட்டு விட்டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.