வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
தலை வாழை இலையில் பிடித்தமான உணவினை சாப்பிடும்போது அதன் சுவையே அருமை .
வாழை இலை உணவின் ருசியை அதிகரிக்கும் .
அந்த உணவை சாப்பிடும் போது மனதுக்கும் ஒரு வித திருப்தியை தரும்.
இவ்வாறு உணவின் சுவையை அதிகரிக்க செய்யும் .
வாழை இலையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன .
இலையில் உள்ள பாலிஃபெனால் சுரப்பி வாழை இலையில் சாப்பிடும் போது உணவில் கலந்து புற்றுநோயை தடுக்க உதவுகிறது .
மேலும் உடலில் அணுக்களில் உள்ள டிஎன்ஏ வினை கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கிறது.
வாழை இலையில் இருக்கும் பச்சையும் நச்சு கிருமிகளை அழித்து நமக்கு ஆரோக்கியமான உணவினை தருகிறது.
இதிலுள்ள குளோரோஃபில் நமது உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது .
மேலும் வயிறு மற்றும் குடல் பகுதியில் இருக்கின்ற புண்களையும் ஆற்றுகிறது .
இலையில் உணவை கட்டி எடுத்துச் சென்று சாப்பிடுபவர்களுக்கு உணவின் சத்துக்கள் குறையாமல் முழுவதுமாக கிடைக்கிறது.
வாழை இலையில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் வாதம், பித்தம் ,கபம் ஆகியவற்றின் சமநிலை காக்கப்படுகிறது.
சமநிலை மாறும் பட்சத்தில் உடலில் நோய்கள் ஏற்படும்.
வாழை இலையில் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
இதில் ஆண்டி ஆக்சிடென்ட் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள அணுக்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது.
இதனால் இளமையுடன் அதிக நாட்கள் இருக்க முடியும்.
சூடான உணவினை இலையில் பரிமாற்றப்பட்டு சாப்பிடும்போது அதில் உள்ள பாலிபெனால் நாம் சாப்பிடும் உணவில் கலந்து இலையில் உள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் போன்ற சத்துக்கள் உணவுடன் சேர்ந்து கிடைக்க உதவுகிறது.