வாய் துர்நாற்றத்தை போக்கும் வழிகள்

வாய் துர்நாற்றத்தை போக்கும் வழிகள்

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை மென்று வாயில் அடக்கிக் கொள்ளலாம்.

 அரை லிட்டர் நீரில் புதினாச்சாறு, எலுமிச்சை சாறு ஆகியவைகளையொட்டி கலந்து வாய் கொப்பளிக்கலாம்.
 
 இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

 எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும் .

 குடல்புண் பிரச்சனையால் தான் பெரும்பாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.

 காலை எழுந்தவுடன் காபியை தவிர்த்துவிட்டு நான்கு டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

 இதனால் வயிறு சுத்தப்படுவதுடன் அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

 அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்த்தால் வாய் துர்நாற்றம் நீங்கும் .

கொத்தமல்லி கீரையை வாயில் போட்டு மென்று வர வாய் துர்நாற்றம் நீங்கும்.
 காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.


கருத்துரையிடுக

புதியது பழையவை