மன அழுத்தத்தை குறைக்கும் டூடுலிங்

மன அழுத்தத்தை குறைக்கும் டூடுலிங்

ஏதாவது ஒரு வேலையில் நீண்ட நேரம் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சிலருக்கு மனம் சலிப்படையக் கூடும்.

 அத்தகைய தருணங்களில் கையில் பென்சிலும், காகிதமும் இருந்தால் தங்களை அறியாமலேயே ஏதாவது கிறுக்கிக் கொண்டு இருப்பார்கள்.

 இவ்வாறு வரைவதையே டூடுலிங் என்று அழைக்கிறார்கள்.

 இந்த முறையில் வரையப்படும் கோடுகள், வடிவங்கள் ஆகியவை டூடுலிங் என்று குறிப்பிடப்படுகின்றன.

 வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது மாணவர்கள் அதை கவனிக்காமல் நோட்டு புத்தகத்தில் ஏதாவது வரைந்து கொண்டிருப்பது, தொலைபேசி உரையாடலின் போது எதையாவது வரைந்து கொண்டே பேசுவது இவை எல்லாம் டூடுலிங் உதாரணங்களாகும்.

 சலிப்பை உண்டாக்கும் விஷயங்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக மூளை தன்னிச்சையாக செயல்பட்டு தன்னை விழிப்புடன் வைத்துக் கொள்ள முடியும். அதன் வெளிப்பாடாகத்தான் இத்தகைய இலக்கற்ற கிறுக்கல்கள் வரையப்படுகின்றன.

 இது குறித்து ஆய்வுகளின் மூலம் கவன சிதறலை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்துவதற்கு டூடுலிங் உதவும் என்பது தெரியவந்துள்ளது.

 டூடுலிங் மூலம் படிப்புத் திறன் மற்றும் செயலாக்கத்துடன் மேம்படும் சலிப்பை வெளிப்படுத்த இவ்வாறு வரையும் போது மன அழுத்தம் குறையும்.

 டூடுலிங் வரைவது ஒருவருடைய நினைவுத்திறனை அதிகரிப்பதாக இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிகிறது.

 டூடுலிங் செய்வதன் மூலம் ஒரு பிரச்சனையை பல்வேறு கோணங்களில் யோசித்து தீர்வு காண இயலும் .

டூடுலிங் மூலம் ஆள் மனதில் இருக்கும் உணர்வுகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

 அவற்றை உற்று கவனித்தால் ஒருவர் தன்னை பற்றி அதிகமாக புரிந்து கொள்ள முடியும் .

இதனால் பதற்றம் குறைந்து மனம் அமைதியாகும்.

 உயர் ரத்த அழுத்தம் குறையும்.

 தூக்கம் சீராகும்.

 டூடுலிங் வரைவதற்கு தனிப்பட்ட பயிற்சியோ ? உபகரணங்களோ? தேவையில்லை .

பென்சில் அல்லது பேனா கொண்டு சாதாரண காகிதத்தில் உங்கள் விருப்பப்படி வரையலாம்.
 நீங்கள் வரையும் வடிவங்கள் கச்சிதமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கருத்துரையிடுக

புதியது பழையவை