உருளைக்கிழங்கு சிப்ஸ் உருவான கதை

உருளைக்கிழங்கு சிப்ஸ் உருவான கதை

1853 ஆம் ஆண்டில் ஒருநாள் நியூ ஆர்க்கின் சரடோகா ஸ்பிரிங்கில் உள்ள மூன்ஸ் லேக் ஹவுஸ் என்ற உணவகத்தில் அமெரிக்க பணக்காரர்களில் ஒருவராக இருந்த கொர்னேலியஸ் வாண்டர்பில்ட் உணவருந்த வந்திருக்கிறார்.

 அந்த உணவகத்தின் சமையல்காரரான ஜார்ஜ் க்ரம் ரொம்ப ஃபேமசமானவர் .

அவரது கைவண்ணம் பலருக்கு ரொம்ப இஷ்டம் அப்படிப்பட்ட குக்கூ சமைத்து இணை உணவாக பரிமாறிய பொறியியல் வகைகள் பணக்கார பணக்காரரான வாண்டர் பில்டுக்கு எவ்ளோ பிடிக்கவில்லை .

அவற்றை திருப்பி அனுப்பியதோடு பொறியியல் மிகவும் தடிமனாக இருக்கிறது என புகார் கூறியிருக்கிறார்.

 இதனால் விரக்தி அடைந்த க்ரம் அருகில் இருந்த உருளைக்கிழங்கை பயன்படுத்தி ஒரு புதிய உணவை தயாரித்தார் .

அதை மெல்லிய காகிதம் போல் நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து உப்பு தூவி கொடுத்தார் .

அவசரமாக செய்யப்பட்ட அந்த உணவு வாண்டர் பில்ட்க்கு ரொம்பவே பிடித்துப் போனதாம் .

இப்படி பிறந்தது தான் உருளைக்கிழங்கு சிப்ஸ்.

 அதன் சுவை ஊரெங்கும் பரவத் தொடங்க 1860 இல் ஜார்ஜ் க்ரம்ஸ், க்ரம்ஸ் ஹவுஸ் என்ற ஒரு லேக் வியூ உணவகத்தை தொடங்கி அதில் பிரதான உணவாக உருளைக்கிழங்கு சிப்ஸ் பரிமாறினார் .

அது விரைவில் சரகோடா சிப்ஸ் என்று அழைக்கப்பட்டது.

 வாடிக்கையாளர்கள் உருளைக்கிழங்கு சிப்ஸ் ருசிக்க வரிசையில் நின்று வாங்கிச் சென்றார்கள்.

 இந்நிலையில் 1921 ஆம் ஆண்டு மளிகை கடைக்காரரான ஏர்ல் வைஸ் தனது கடையில் அதிகப்படியாக தேங்கி விட்டு உருளைக்கிழங்கை என்ன செய்வது என்று யோசித்தபோது சரக்கோடா சிப்ஸ் பற்றி அறிந்து தன்னிடம் இருந்த உருளைக்கிழங்குகள் அனைத்தையும் மெல்லியதாக நறுக்கி பொரித்து எடுத்து பழுப்பு காகித பைகளில் அடித்து விற்பனை செய்ய தொடங்கினார் .

இப்படித்தான் வெகுஜன விற்பனைக்கு வந்து சேர்ந்தது உருளைக்கிழங்கு சிப்ஸ்.

 பின்னர் உருளைக்கிழங்கு சிப்ஸ் புகழ் விரைவாக நாடு முழுவதும் பரவியது.

 1942 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கம் அவற்றை அத்தியாவசிய உணவாக அறிவித்தது.

 இதன் தாக்கம் இரண்டாம் உலகப்போரின் போது அனைத்தும் முடக்கப்பட்ட நிலையிலும் உருளைக்கிழங்கு சிப்ஸ் உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டும் திறந்திருக்க அனுமதித்ததாம் அமெரிக்க அரசாங்கம் 
 அந்த அளவுக்கு அமெரிக்கர்களின் முக்கிய உணவாக மாறி இருந்தது உருளைக்கிழங்கு சிப்ஸ்.

கருத்துரையிடுக

புதியது பழையவை