நுரையீரலை காக்கும் கடுக்காய்
நாட்டு மருந்து கடைகளில் கடுக்காய் கிடைக்கும் .அதில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக நுரையீரலுக்கு மிகவும் நல்லது.
நாட்டு மருந்து கடையில் கடுக்காயை வாங்கி அதனை உடைத்து போல் பகுதியை தனியாக எடுத்துக் கொள்ளவும் .
உள்ளிருக்கும் விதையை பயன்படுத்தக் கூடாது.
இந்த கடுக்காய் தூள்களை அரை லிட்டர் பச்சை தண்ணீரில் முதல் நாள் இரவே ஊற வைக்கவும். வெந்நீர் கூடாது.
சுமார் 8 மணிக்கு ஊற வைத்தால் அதனை மறுநாள் காலையில் பயன்படுத்த முடியும்.
காலையில் பார்த்தால் அந்த தண்ணீர் நிறம் மாறியிருக்கும்.
அதை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டி அத்துடன் மேலும் ஒன்றரை லிட்டர் பச்சை தண்ணீர் சேர்க்கவும் .
இந்த தண்ணீரை சாப்பிடுவதற்கு முன்னதாக பருக வேண்டும்.
உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
நுரையீரலில் சளி வெளியேறி சீரான சுவாசம் ஏற்படும்.
கடும் மூச்சு திணறலால் பாதிக்கப்படுபவர்கள் இதை கடைப்பிடித்து நலம் பெறலாம்.
கடுக்காயை மேற்கூற்றுப்படி பயன்படுத்தி வந்தால் நுரையீரலில் தேங்கியுள்ள சளி அடைப்பு தொற்று பாதிப்பை போக்கலாம் .
புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
நோய் எதிர்ப்பாற்றலும் அதிகரிக்கும்.