தூக்கம் கெடுக்கும் குறட்டையை விரட்டுங்கள்
தூங்கும்போது மூச்சுக்காற்று தொண்டைப் பகுதியில் உள்ள மெல்லிய தளர்வான திசுக்களின் வழியாக செல்வதால் ஏற்படும் அதிர்வு ஒளியே குறட்டை என்கிறோம் .
குறட்டை வருவது இயல்பானது தான் என்றாலும் பலருக்கு இது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது.
சில நேரங்களில் குறட்டை தீவிரமான உடல்நல கோளாறின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
அதிகப்படியான உடல் எடையை குறைத்தல், மது பழக்கத்தை தவிர்த்தல், பக்கவாட்டு நிலையில் படுத்து உறங்குதல், சற்று உயரமான தலையணையை பயன்படுத்துதல் போன்ற ஒரு சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமாக குறட்டை விடுவதை நிறுத்த முடியும்.
இது தவிர குறட்டை பிரச்சினையை தீர்ப்பதற்கு இயற்கையான வலிகள் சிலவற்றை காண்போம்
நீராவி பிடித்தல்
குரட்டைக் காண காரணங்களில் ஒன்று மூக்கில் ஏற்படும் அடைப்பு. இதனால் தூக்கத்தில் மூச்சு திணறல் ஏற்படும்.
இதற்கு ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதிலிருந்து வரும் நீராவியை 10 நிமிடங்களுக்கு மூக்கு வழியாக உள்ளெழுக்க வேண்டும்.
படுக்கைக்கு செல்லும் முன்பு இவ்வாறு செய்யலாம்.
இதனால் மூக்கில் உண்டாகும் அடைப்பு நீங்கி குறட்டை விடுவது நிற்கும் .
புதினா மற்றும் வெந்தயம்
செரிமான பிரச்சனைகளாலும் குறட்டை ஏற்படலாம்.
இதற்கு புதினா மற்றும் வெந்தயம் சிறந்த தீர்வாகும்.
வெந்தயம் தூக்கத்தில் ஏற்படும் மூச்சு திணறலுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது.
சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து அதில் தூங்க செல்வதற்கு முன் சாப்பிடலாம்.
அதேபோல் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வெந்தய பொடி மற்றும் சிறிதளவு புதினா இலைகளை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
இந்த நீரை வடிகட்டி அதில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம் .
இதனால் செரிமான பிரச்சனை நீங்குவதுடன் இரவில் நிம்மதியான உறக்கமும் கிடைக்கும் .
ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன்
அரை டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து படுக்கைக்கு செல்லும் முன்பு சாப்பிடலாம்.
இது தவிர ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தூங்க செல்வதற்கு முன்னர் குடிக்கலாம்.
இது தொண்டைக்கு இதமாக இருப்பதுடன் குறட்டை தடுக்கும் .
பூண்டு
பூண்டின் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
இது சுவாசம் மண்டலத்தை சுத்தப்படுத்தி நாசிப் பாதையில் சளி படிவதை தடுத்து குறட்டையை குறைக்கும்.
இரண்டு அல்லது மூன்று பற்களை எடுத்து மென்று சாப்பிடவும்.
பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.
படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் குறட்டை நிற்கும்.