மாதவிலக்கும் உணவும்
பெண்கள் மாதவிலக்கு ஆகும் காலத்துக்கு முன்பும், ரத்தப்போக்கு இருக்கும் நாட்களிலும், மாதவிடாய் முடிந்த பின்பும் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது முக்கியம்.
மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் .
இதனால் பசி, எரிச்சல், சோர்வு மற்றும் எதிர்மறையான மனநிலை மாற்றங்கள் உண்டாகும்.
இதை தவிர்ப்பதற்கு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் காய்கறி , பழங்கள் போன்றவை அதிகமாக சாப்பிடலாம்.
போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது முக்கியம்.
உப்பை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.
அதிகமாக சாப்பிடாமல் அளவாக உட்கொள்வது நல்லது .
மாதவிடாய் ஆரம்பித்து ரத்தப்போக்கு ஏற்படும் நாட்களில் இரும்பு மற்றும் மக்னேஷின் சத்துக்கள் நிறைந்த உணவுகள் ,முழு தானியங்கள், மீன், முட்டை, தயிர், டார்க் சாக்லேட் போன்றவற்றை சாப்பிடலாம்.
இஞ்சி தேநீர் மாதவிடாய் நேரத்தில் வலியை குறைக்க உதவும் .
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம்.
மாதவிடாய் முடிந்த பின்பு புரதம், கால்சியம், இரும்புச்சத்து , வைட்டமின் பி நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
கீரை வகைகள், பால் மற்றும் பால் பொருட்களை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நார் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது .
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.