ரத்த ஓட்டத்தை சீராக்கும் சின்ன வெங்காயம்

ரத்த ஓட்டத்தை சீராக்கும் சின்ன வெங்காயம் 

மணத்திற்காகவும், ருசிக்காகவும் பயன்படுத்துகின்றவை வெங்காயம்.

 இதில் புரதம், சுண்ணாம்பு சத்து, வைட்டமின் ஆகியவை இருக்கின்றன.

 பொட்டாசியம், ரிபோபிளேவின் ஆகியவை நிறைந்துள்ளன.

 வெங்காயத்தை பச்சையாக உண்பதன் மூலம் நிறைய உடல் கோளாறுகளை தீர்த்துவிடலாம் .

வெங்காயத்தை வாயில் போட்டு ஐந்து நிமிடங்கள் சுவைத்தால் வாயில் உள்ள கிருமிகளில் அனைத்தும் மடிந்து விடும்.

 வெங்காயம் கொழுப்பை கரைக்கும்.

 தடுமண், இளைப்பு, வாதம், பித்த கிறுகிறுப்பு, ஈரல் கோளாறுகள், நீர் சரிவர பிரியாமை, இரத்த சோகை, நீரழிவு போன்ற பிணிகளை குணப்படுத்தும்.

 ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

 இரத்தம் உறைதல் , அடைப்பு ஆகியவற்றை நீக்கி மாரடைப்பை தடுக்கும் .

மண்ணீரல் கோளாறுகளை அகற்றும்.

 வெங்காயம் சளியை கரைத்து வெளியேற்ற பயன்படுகிறது.

 சளி பிடிக்காமல் தடுக்கின்றது.

 தடுமல் , இருமல், காய்ச்சல் ஆகியவற்றை போக்குகிறது.

 ஒரு பச்சை வெங்காயத்தை தின்றால் பல் தொடர்பான எந்த நோயும் வராது.

 வெங்காயம் சிறுநீர் தொல்லைகளை போக்குகிறது.

 உங்களுக்கு பாதம் வீங்கி இருக்கிறதா கவலைப்பட வேண்டாம் .மூன்று வேளையும் இரண்டு வெங்காயம் வீதம் பச்சையாக சாப்பிட்டு வந்தால் போதும் வீக்கம் குறைந்து விடும் .
இவற்றில் சின்ன வெங்காயம் தான் பெரிய நன்மைகளை தருகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை