குழந்தையின் பாதுகாப்பான இல்லம்
குழந்தைகள் பிறந்து ஆறு மாதத்திலேயே அதன் சுற்றித்தனத்தை காட்ட தொடங்கிவிடும்.
எனவே குழந்தைகள் வளரும் வீட்டின் சூழல் முழு பாதுகாப்பு மிகுந்ததாக இருக்க வேண்டும் .
வீட்டில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த சில குறிப்புகள் இதோ:
குழந்தைகள் வளரக்கூடிய வீடு எரிச்சல்கள் இன்றி அமைதியாக இருக்க வேண்டும் .
கைக்குழந்தையை வைத்திருப்பவர்கள் குழந்தையை தனியாக படுக்கையில் படுக்க வைத்து செல்வதை தவிர்க்கவும்.
யாரும் இல்லாத பட்சத்தில் குழந்தையை தொட்டிலில் இருந்தாலும் அவ்வப்போது கவனிக்க வேண்டும்.
டேபிள் சோபா போன்றவற்றின் விளிம்புகள் கூறாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவை குழந்தைகள் எழுந்து நிற்கும் சமயத்தில் தலையில் மோதும் அபாயம் உள்ளது.
படுக்கை மர சாமான்கள் மற்றும் பிற பொருட்களை ஜன்னல்களுக்கு அருகில் வைக்காதீர்கள் .அவற்றுள் ஏறி ஜன்னல் வழியாக குழந்தைகள் எட்டிப் பார்க்க ஆசைப்படும். அது விபரீதத்தில் முடியலாம் .
எலக்ட்ரிக் விளக்குகள் சொருகும் சாக்கெட்டுகளை கவர் போட்டு முடி வையுங்கள். ஏனெனில் ஆர்வக்கோளாறில் குழந்தைகள் அவற்றில் தங்களின் பிஞ்சு விரல்களை விட்டு விளையாட விரும்பும்.
குழந்தைக்கு எட்டும் தூரத்தில் கண்ணாடி பொருட்களோ? மின்சார வயர், தண்ணீர் தொட்டியோ? இருக்கக் கூடாது.
மாத்திரை மருந்துகளை குழந்தைகள் கண்களில் படும்படி வைக்க கூடாது.
தீப்பெட்டி, ஊக்கு, ஊசி, சிறு நாணயங்கள், பல் குத்தும் குச்சி ,பாதி தீர்ந்து போன கிரையான்ஸ், பிளேடு, கத்திரிக்கோல் முதலியவற்றை டிராயரில் போட்டு பூட்டி வையுங்கள்.
வீட்டு ஜன்னல்களை நீண்ட சரங்களை கொண்ட குழல்கள் மற்றும் பணிகள் நாடாக்கள் உள்ளிட்ட வகையால் அலங்கரிக்கும்போது அவை தொட்டு விளையாடும் குழந்தைகள் அவற்றை வாயில் போடும் அபாயம் உள்ளது.
எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
வீட்டில் பயன்படுத்தும் டேபிள் ஃபேனில் சுழற்சி குழந்தையின் ஆவலை தூண்டும் .
பயமறியா இல்லா கன்றுகள் மின்விசிறிகள் இடையே கையை முறிக்க நேரிடும். இவைகளை எட்டாத தூரத்தில் வைக்கவும்.
குழந்தைகள் வீட்டில் இல்லாதபோது மின்சார சாதனங்களை பழுது பார்ப்பது, ஆசிட் ஊற்றி கழிப்பறையை கழுவுவது, வெள்ளை அடிப்பது போன்ற பணிகளை செய்வது நல்லது.
மொட்டை மாடி மற்றும் பால்கனியில் இருந்து வேடிக்கை பார்ப்பதில் குழந்தைகளுக்கு அலாதி விருப்பம் எனவே பால்கனி தடுப்பு சுவர்கள் அருகே செல்லும்போது குழந்தைகள் மீது கவனம் தேவை .
விளையாட்டு பொருட்களை வாங்கும் போது குழந்தையின் வயதுக்கு ஏற்ப பாதுகாப்பான நச்சுத்தன்மையற்ற பொருட்களை தேர்ந்தெடுக்கவும்.
குழந்தை பிறந்து ரெண்டு வயதுக்குள் 80 சதவீதம் மூளை வளர்ச்சி அடைந்துவிடும் .
இந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.
செல்போன், டிவி, லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்து குழந்தைகளை பழக்கப்படுத்தக் கூடாது. இது குழந்தையுடைய கண்கள் மற்றும் முழுமையான வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும்.
சூடான உணவு மற்றும் சுடுதண்ணீர் வைத்திருக்கும் போது குழந்தை அருகில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .
வீட்டின் தரையில் தண்ணீர் மற்றும் ஈரம் இல்லாமல் இருந்தால் வழுக்கி விழுவதை தவிர்க்கலாம்.
குழந்தை எப்போதும் பெற்றாேர் அல்லது பராமரிப்பவர் கவனிப்பில் இருப்பது மிக நன்று.