புகை நல்லது

புகை நல்லது 

சாம்பிராணி புகை போடுவதை அனைத்து மதத்தின்ருமே பின்பற்றி வருகிறார்கள் .

எதிர்மறை சக்திகளை விரட்டும் என்றும், விஷ ஜந்துக்களை விரட்டும் என்றும் கூறுகிறார்கள்.

 சிறந்த கிருமி நாசினி என்றும் கூறுவது உண்டு.

 மருத்துவம் ரீதியாக சாம்பிராணி புகை போடுவது ஆரோக்கியமானதானா? விளக்கம் அளிக்கிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் வினோத்குமார் :

 Frankincense என்ற ஒரு மரத்தின் பாலில் இருந்து தயாரிக்கப்படுவது தான் சாம்பிராணி .

கலாச்சார ரீதியான, மத ரீதியான, பாரம்பரியம் கொண்ட நம் நாட்டில் எல்லா இடங்களிலுமே சாம்பிராணியை பயன்படுத்தி வருகிறார்கள் .

அதனால் சரி என்றோ ? தவறு என்றோ ? இதை மேலோட்டமாக சொல்லி விட முடியாது.

 ஆனால் ஒரு மருத்துவராக சாம்பிராணி புகை போடுவதில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும் என்ற விஷயத்தை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

 முன்பு அதாவது நம் அப்பா காலத்து தலைமுறையில் இயற்கையான சாம்பிராணியை பயன்படுத்தி வந்தார்கள்.

 அவர்கள் வசித்த இடமும் காற்றோட்டம் உள்ளதாக, விசாலமானதாக இருந்தது.

 ஆனால் இன்று ரசாயன கலப்பு மிகுந்த செயற்கை சாம்பிராணிகள் அதிகம் விற்கப்படுகின்றன.

 வாசனைகளாகவும், அதிகப் புகை வரவேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற ரசாயனங்களை கலக்கின்றனர்.

 வீடுகளும் இப்போது நெருக்கமானதாக, இட வசதி குறைந்ததாக இருக்கிறது.

 இந்த சூழ்நிலை உணர்ந்து தரமான சாம்பிராணியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதும், வீட்டிலிருந்து புகை வெளியேறும் அளவுக்கு காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதும் அவசியம்.

 அதிக புகை வரும் அளவுக்கு சாம்பிராணி போடுவதை தவிர்க்கலாம்.

 இல்லாவிட்டால் கண் எரிச்சல், கண் சிவந்தல், மூக்கில் தண்ணீர் வடிதல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

 ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாம்பிராணி புகையின் ரசாயனங்களால் வீசிங் வரக்கூடும்.
 அதனால் சாம்பிராணியை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை