மாதவிடாய் பிரச்சனைகளை நீக்கும் பதநீர்

மாதவிடாய் பிரச்சனைகளை நீக்கும் பதநீர் 

பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பானம் பதநீர் .

 உடலுக்கு குளிர்ச்சி தரும் பதநீரில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.

 இதில் புரதம், நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிப்போபிளேவின், ஆஸ்கார்பிக் அமிலம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

 அதிக உஷ்ணத்தால் ஏற்படும் நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகள், ஆறாத புண்கள் கொப்பளம் , ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, மூலச்சூடு ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது பதநீர் .

இதன் நன்மைகள் குறித்து மேலும் தெரிந்து கொள்வோம் :

 பதநீரை பழைய கஞ்சி உடன் சேர்த்து புளிக்க வைத்து ஆறாத புண்கள் கொப்பளங்கள் மீது தடவி வந்தால் நாளடைவில் குணமாகும்.

 பதநீரில் உள்ள சுண்ணாம்பு சத்து, எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான பாதிப்புகள் வராமல் பாதுகாக்கும்.

 பற்களை வலிமைப்படுத்தி ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவதை தடுக்கும்.

 48 நாட்கள் பதநீரை தொடர்ந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும் .

மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

 பதநீரில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கும்.

 50 கிராம் வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். 50 மில்லி அளவு பதநீரை மிதமாக சூடுபடுத்தி அதில் சிறிதளவு வெந்தய பொடியை சேர்த்து கலக்கி காலை மாலை இரண்டு வேளையும் குடித்து வர வேண்டும் .

இதன் மூலம் ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, மூலச்சூடு போன்ற பிரச்சனைகள் குணமாகும் .
50 மில்லி பதநீருடன் அரை தேக்கரண்டி மஞ்சள் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண், தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீதக்கழிச்சல் ஆகியவை நீங்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை