ஃபேஸ் பேஸ் ப்ளீச்
பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் முன் நாம் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அதிலும் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
அந்த வகையில் நம் வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டு சருமம் பொலிவு பெற என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்:
ஒரு முறை தக்காளி ப்ளீச் செய்து பாருங்கள் .
தக்காளியை அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து முகத்தில் தடவி ஊறவைத்து பின் கழுவினால் முகம் பட்டு போன்று மின்னும்.
இந்த முறையினை தினமும் செய்து வர சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
சருமத்தில் ஏற்படும் தேவையற்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு வெள்ளரிக்காய் பீச் மிகவும் ஏற்றது.
வெள்ளரிக்காயின் சிறு துண்டை எடுத்து அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு, மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து முகத்திற்கு மாஸ் போன்று போட்டு ஊற வைத்து கழுவினால் முகம் பளபளப்பாகவும் பொலிவோடும் காணப்படும்.
சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆலிவ் ஆயில் ப்ளீச் மிகவும் சிறந்த ஒன்று.
ஆலிவ் ஆயிலை ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து சருமத்தில் இந்த கலவையை நன்றாக அப்ளை செய்து சிறிது நேரம் ஸ்க்ரப் செய்யுங்கள்.
பின்பு சருமத்தை கழுவ வேண்டும்.
இந்த முறை வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகம் பளிச்சென்று ஆகும்.
எண்ணெய் மயமான சருமம் உடையவர்கள் முகம் கழுவும் போது பச்சை பயறு மாவு உபயோகிப்பது நல்லது.
இரவு உறங்கச் சொல்லும் முன்னர் முகத்தை சுத்தமாக கழுவுவது நல்லது.
முகத்தில் உள்ள பருக்களை நீக்க ஒரு பல் பூண்டு அல்லது துண்டு கிராம்பை அரைத்து அதை விரல் நுனியில் தொட்டு வரும் மீது வைத்தால் பரு அப்படியே அமுங்கிவிடும்.