பாத எரிச்சல்களை கட்டுப்படுத்துவது எப்படி?
பாதங்களில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்படுவதால் கால்களில் பாத எரிச்சல் வரும்.
சில சமயம் தாங்க முடியாத வலியை போல காலில் நெருப்பை வைத்தது போல் இருக்கும்.
கால் விரல்களில் கூச்ச உணர்வு ஏற்படுவதோடு இதன் மூலம் அறிகுறி பின்னர் அந்த பகுதிகளில் உணர்ச்சி குறைத்து கொஞ்சம் கொஞ்சமாக அது பாத எரிச்சலாக மாறும் .
உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானால் பாத எரிச்சல் ஏற்படும்.
இதனால் பாத எரிச்சல் என்ற உடன் சர்க்கரை நோய் என எண்ண வேண்டாம்.
ரசாயனங்களால் ஏற்படும் அலர்ஜி சிறுநீரக செயலிழப்பு புற்றுநோய்களுக்கான கீமோதெரபி எடுப்பதாலும் முடக்கு வாதம் போன்ற பல காரணங்களாலும் பாதத்தில் எரிச்சல் வரலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும் பாத எரிச்சல் உண்டாகும்.
வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கும் பி 12 குறைபாடு, ஃபோலேட் குறைபாடு, இருப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை வரும்.
ஆர்த்ரரைட்டிஸ் பிரச்சனைகளால் நரம்பு மண்டலம் பாதிப்புல்லாகுவதாலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு கால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பாத எரிச்சல் உண்டாகும் .
ஹைபோ தைராய்டிசம் இருப்பவர்களுக்கு பாத எரிச்சல் அதிகமாக இருக்கலாம்.
தைராய்டு அளவை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் இதை தவிர்க்கலாம்.
தீர்வுகள்
மருந்தாணியில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்து அதை பாதத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து பாதத்தை சுத்தம் செய்து வந்தால் பாத எரிச்சல் குறையும்.
மஞ்சளில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியை குறைக்க உதவும்.
இரண்டு மேசை கரண்டி ஸ்பூன் மஞ்சத்தூளை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.
இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
கற்றாழையில் உள்ள சதை பகுதியை பாதத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் எரிச்சல் தணியும்.
உறங்கும் முன் வெந்நீரில் சிறிது உப்பு கலந்து அதில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும்.
பின் சுத்தமான தேங்காய் எண்ணெயை காலில் தடவினால் எரிச்சல் போகும்.
வைட்டமின் பி3 நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும்.
ஆகவே முழு தானியங்கள், பச்சை காய்கறிகள், பீன்ஸ் , பட்டாணி, வேர்க்கடலை, பால், தயிர் மற்றும் முட்டை மஞ்சள் கரு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாதத்தில் எரிச்சல் ஏற்படுவதில் நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.
அதனால் தாங்க முடியாத பாத எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.