பொடுகை நீக்கும் ஆறு வழிகள்

பொடுகை நீக்கும் ஆறு வழிகள்
1. தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு  மசாஜ் 

எலுமிச்சை பழச்சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும்.

 இந்த கலவையை தலைமுடியில் மசாஜ் செய்வது போல தேய்த்து 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும் .

பிறகு சாம்பு தேய்த்து தலையை அலசவும்.

 தேங்காய் எண்ணெய் முடிக்கு ஊட்டமளிக்கும்.

 எலுமிச்சை சாறு பொடுகு தொல்லையை நீக்கி முடி வளர்ச்சிக்கு உதவும் .

2. தயிர் குளியல் 

தயிரை தலையில் நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.

 சுமார் ஒரு மணி நேரம் கழித்து சிறிது ஷாம்பு போட்டு குளிக்கலாம்.

 தயிர், உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

 முடிக்கு பளபளப்பை தரும் .

சைனஸ், ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் இதை தவிர்க்கவும்.

 3. வெந்தயம் பேக் 

இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வைக்கவும் .

மறுநாள் அதை அரைத்துக் கொள்ளவும்.

 இதை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து தலைக்கு குளிக்கவும்.

 இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

 முடி வளர்ச்சிக்கு உதவும்.

 4.  ஆரஞ்சு தோல் 

ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

 இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.

 இது தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

 5. வெங்காயம் மற்றும் வேப்பிலை

வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

 பிறகு தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

 அதேபோன்று கைப்பிடி வேப்பிலையை பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.

 இது தலையில் தேய்த்து ஊற வைத்து பத்து நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.

 இதன் கசப்பு தன்மை தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளை அழித்து .

6. மருதாணி இலை 

கைப்பிடி மருந்தாணி இலைகளை அரைத்து அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.

 இதை தலைமுடியில் நன்றாக தேய்க்கவும் .

இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

 பின்னர் கூந்தலை அலசி குளிக்கலாம்.

 இதனால் பொடுகு தொல்லை நீங்கும்.

 நரைமுடி பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.
 சைனஸ், ஒற்றைத் தலைவலி, சளி பிடிக்கும் பிரச்சனை உள்ளோர் தவிர்க்கவும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை