அடிக்கடி குளித்தாலும் ஆபத்து
தினமும் குளிப்பது நல்ல பழக்கம்.
அது சருமத்திற்கு நன்மை பயக்கும்.
ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பலமுறை குளிப்பார்கள் .
அப்படிப்பட்ட உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல.
வாரத்துக்கு ஏழு முறைக்கு மேல் குளிப்பது, ஒவ்வொரு முறையும் சோப் அல்லது க்ளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணை பாதுகாப்பு அழகை சேதப்படுத்தும்.
சரும தொற்றுக்கு வழி வகுத்து விடும்.
எத்தனை முறையை குளிக்கலாம்?
வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சனை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு ஐந்து முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
சருமத்தின் தன்மையை பரிசோதித்து விட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம்.
அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்?
பாக்டீரியா கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும்.
ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும்.
இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும்.
ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
அப்படி குளிக்கும் போது ஒவ்வொரு முறையும் சோப்பு அல்லது ஷாம்பூ பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
அதாவது சர்வ வறட்சி அடைவது, சரும எரிச்சல், சருமத்தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
அதிக நேரம் குடிப்பதன் காரணமாக ஒவ்வாமை, தொற்று நோய் கூட ஏற்படலாம்.
அடிக்கடி குளிக்கும் செயல்முறையின் போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால் சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்ட்டி பாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும்.
மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத்துவது சரும தொற்று நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் .
நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றி விடும்.
குளிக்கும் நேரத்தை குறையுங்கள்
ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால் குளிக்கும் நேரத்தை குறையுங்கள்.
உதாரணமாக தினமும் 10 நிமிடங்கள் குடித்தால் அது ஐந்து நிமிடங்களாக குறையுங்கள் .
எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படுகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சனைகள் ஏற்படும் .
சூடான நீரை தவிருங்கள் .
அதிகமாக குளித்தால் சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் எல்லை அகற்றி சருமத்தை வறண்டு போக செய்துவிடும்.
வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள்.
அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.
சர்ம ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
சரும வறட்சி,அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும்.
சரும துளைகள் திறப்பதை தடுக்கும்.
கூடுமானும் வரை 15 நிமிடங்களுக்கு மேல் குளிர்வதை தவிர்க்க வேண்டும்.
மென்மையான குளியல் சோப்பு பயன்படுத்துங்கள்.
குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு உள்ளிட்ட ரசாயன கலப்பு அதிகம் இல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது.
இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்து விட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பது தான் நல்லது.
சருமத்தை மென்மையாகவும் ஈரப்பத மாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதம் ஊட்டும்
சோப்பை பயன்படுத்தலாம்.
இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சனைகளை குறைக்கும் .
உடலை உலர வையுங்கள் .
குளித்து முடித்ததும் உடலை உலர்வடையச் செய்வதற்கு டவளைக் கொண்டு அழுத்தமாக தேய்க்க கூடாது.
அது சருமத்தில் உராய்வை எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.
உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும்.
டவளை கொண்டு மென்மையாக துடைப்பது தான் சரியானது .
உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில் தான் துடைக்க வேண்டும்.
குளித்து முடித்ததும் பாத்ரோப் எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது.
சரும மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில் மொய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.