எப்படி யோசிக்கிறாங்கப்பா....


*வாழ்வில் தெரிந்துகொள்ள வேண்டியன*

சில காயங்கள் " *மருந்தால்* " சரியாகும். 
சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும்.

" *ஆடம்பரம்* " அழிவைத்தரும். " *ஆரோக்கியம்* " நல்வாழ்க்கை தரும். 

கார் இருந்தால் " *ஆடம்பரமாக* " வாழலாம்
மிதி வண்டி இருந்தால் " *ஆரோக்கியமாக* " வாழலாம்.

" *வறுமை* " வந்தால் வாடக்கூடாது. 
" *வசதி* " வந்தால் ஆடக்கூடாது.

 *வீரன்*  சாவதே இல்லை. 
" *கோழை* " வாழ்வதே இல்லை.

தவறான பாதையில் " *வேகமாக* " செல்வதைவிட. 
சரியான பாதையில் " *மெதுவாக* " செல்லுங்கள்.

மனிதனுக்கு ABCD " *தெரியும்* " ஆனா *"Q"* ல போகத் "தெரியாது".
எறும்புகளுக்கு ABCD " *தெரியாது* " ஆனா *"Q"* ல போகத் "தெரியும்".

ஆயிரம் பேரைக்கூட " *எதிர்த்து* " நில். 
ஒருவரையும் " *எதிர்பார்த்து* " நிற்காதே.

தேவைக்காக கடன் " *வாங்கு* ". 
கிடைக்கிறதே என்பதற்காக " *வாங்காதே* ".

உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது. 
பொய் எப்போதும் " *விரிவாக* " பேசப்படுகிறது.

" *கருப்பு* " மனிதனின் இரத்தமும் சிவப்புதான். 
" *சிவப்பு* " மனிதனின் நிழலும் கருப்புதான். 

 *வண்ணங்களில்* " இல்லை வாழ்க்கை. 
மனித " *எண்ணங்களில்* " உள்ளது வாழ்க்கை

" *கடினமாய்* " உழைத்தவர்கள் முன்னேறவில்லை. 
" *கவனமாய்* " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

வியர்வை துளிகள் " *உப்பாக* " இருக்கலாம். ஆனால், 
அவை வாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும்.

*கடனாக* இருந்தாலும்சரி,
" *அன்பாக* " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு. 

" *செலவு* " போக மீதியை சேமிக்காதே. 
" *சேமிப்பு* " போக மீதியை செலவுசெய்.

உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " *வெற்றி* " பெற்றால் சிலை, " *தோல்வி* " அடைந்தால் சிற்பி.

 உறவினர்களில் யார் முக்கியம் என்பதை " *உயிரற்ற* " பணமே முடிவு செய்கிறது.
கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு " *முட்டாள்* " என்று தெரியும். 
கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு
" *புத்திசாலி* " என்பது புரியும். 

பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " *போற்றும்* ".
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி
" *தூற்றும்* ".

பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " *பொய்* ". 
அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " *உண்மை* ".

மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் " *புத்திசாலி* 
வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் " *திறமைசாலி* ".

 கவலைகள் கற்பனையானவை.
" *மீதி* " தற்காலிகமானவை.

குறைகளை " *தன்னிடம்* " தேடுபவன் தெளிவடைகிறான். 
குறைகளை " *பிறரிடம்* " தேடுபவன் களங்கப்படுகிறான்.
அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் " *உண்டு* ".
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " *இல்லை* "


விழுதல் என்பது " *வேதனை* ". 
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " *~சாதனை*~ "

கருத்துரையிடுக

புதியது பழையவை