வீட்டை பராமரிக்க டிப்ஸ்
வீடு, நாம் அனைவரும் வசிக்கும் இடம் .
அது சுத்தமாக இருந்தால்தான் நம்மால் அந்த வீட்டில் மன நிம்மதியோடு வாழ முடியும் .
அதனால் நாம் அதனை பராமரிக்க சின்ன சின்ன டிப்ஸ் களை பின்பற்றலாம்.
மாத மாதம் வீட்டை ஒட்டடை அடிக்க வேண்டும்.
கதவின் கீழ்கள் சத்தமிடுவது, மரம் விரிவடையும்போது கதவு சரிவர மூடாமல் இருப்பது போன்றவை முக்கிய பிரச்சனைகள்.
இது குறிப்பாக மழைக்காலங்களில் அதிக அளவில் ஏற்படும்.
இந்த கீழ்களின் சத்தத்தை நிறுத்த கிரீஸ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
உப்பு காகிதத்தை பயன்படுத்தி கதவைத் தேய்த்து அவ்வப்போது மென்மையாக்கலாம் .
இதனால் கதவுகள் நன்றாக மூடக்கூடும்.
மோசமான பிளம்பிங், விரிசல் போன்ற பல காரணங்களால் சுவர்களில் கறை படியக்கூடும்.
இவற்றை அவ்வப்போது கவனித்து சரி செய்து தரமான ஸ்டெயின் கிளீனரை பயன்படுத்தி கரைகளை அகற்றலாம்.
வீட்டில் உள்ள தண்ணீர் பைப்புகளில் தண்ணீர் ஸ்மூத்தாக வருவதற்கு சிறிய அளவிலான ஃபில்டர் இணைக்கப்பட்டிருக்கும்.
உப்பு தண்ணீரை பயன்படுத்தும் போது நாளடைவில் அதில் உப்புகள் படிந்து தண்ணீர் வரத்து குறையக்கூடும்.
அவ்வப்போது ஃபில்டரை கழட்டி சுத்தம் செய்யலாம் .
கழிவு நீர் வெளியேறும் வடிகால் பாதையையும் முடிந்த அளவு சுத்தமாக வைத்திருக்கவும் .
தினசரி மற்றும் வாரம் தோறும் வழக்கமாக வீட்டை சுத்தப்படுத்துவதைத் தவிர ஆண்டுதோறும் ஒரு முறை டீப் கிளீனிங் செய்வது அவசியம்.
அதற்காக பல நிறுவனங்கள் உள்ளன .
அவர்களை அணுகினால் உங்களுக்கு வேலை இல்லாமல் உங்கள் வீட்டினை பளிச்சென்று மாற்றி விடுவார்கள் .
பீரோ, கட்டில், அலமாரிகளின் அடிப்பகுதி மற்றும் பின்புறம் ஃபேன், லைட், டிவிக்கு பின்பகுதி என ஆங்காங்கே முழுமையாக தூசிகளை சுத்தப்படுத்துவது அவசியம்.