கோடையை சமாளிக்க எளிய வழிகள்
வெயில் காலத்தில் சோர்வு, தாகம், பித்தம், சர்ம சுருக்கம், வேர்க்குரு, தோல் கருத்துப் போவது, முகப்பரு, பசியின்மை டியேரியா, உடம்பில் நீர்ச்சத்து வற்றிப் போவது போன்ற பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
இவை எல்லாம் கோபம், பொறுமையின்மை போன்ற மனப்பிரச்சனைகளையம் உருவாக்கும்.
எனவே மனமும், உடலும் குளுமையாக கோடையை சமாளிக்க எளிய குறிப்புகள்.
தாகம் எடுத்தால் உடனே மடமடவென தண்ணீர் அருந்தவும்.
அப்புறமாக குடிக்கலாம் என்று தள்ளி போட வேண்டாம்.
மண்பானை தண்ணீர் மிக நல்லது .
இயற்கை அந்தந்த கால நிலைக்கு உடலின் தேவைக்கேற்ப பழங்கள், காய்கறிகளை விளைவிக்கிறது .
எனவே ஒவ்வொரு கால நிலைக்கும் அந்த சீசனுக்குரிய பழத்தை அதிக அளவில் சாப்பிடவும் .
கோடையில் கிடைக்கும் மாம்பழத்தை வேனில் கட்டிகள், வியர்க்குரு பாதிப்பு இருப்பவர்களை தவிர மற்றவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.
வெயிலால் தலை முழுவதும் வியர்த்து அதனால் வரும் சளி பிடித்தலுக்கு எண்ணெய் குளியல் சிறந்தது.
தலையுடன் உடம்புக்கும் எண்ணெய் தேய்த்து ஊற விட்டு குளிக்கலாம் .
பன்னீர் ரோஜா இதழ்களை பாலுடன் சேர்த்து அரைத்து முகம், கழுத்து, கை மற்றும் கால் போன்ற வெயில் நேரடியாக படும் இடங்களில் தடவி பத்து நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் சரும கருமை நீங்குவதோடு முகம் பட்டு போல மிருதுவாகும்.
கார்பன்-டை-ஆக்சைடு அடைத்த குளிர்பானங்கள் உடம்பில் எரிச்சலை இன்னமும் அதிகரிக்கவே செய்யும்.
அவற்றைத் தவிர்த்து இயற்கையாக தயார் செய்யும் பழச்சாறு, நீர் மோர் போன்றவற்றை ஐஸ் சேர்க்காமல் குடிப்பது உடம்பையும், சருமத்தையும் குளிர்ச்சியாக்கும்.
இரவு உறங்கச் செல்வதற்கு முன் உள்ளங் கால்களில் விளக்கெண்ணெய் தடவி விட்டு படுத்தால் உடல் குளிர்ச்சியாகும்.