ஆந்திர கடற்கரையில் தங்க வேட்டை

ஆந்திர கடற்கரையில் தங்க வேட்டை 

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரையில் மக்கள் தங்கவேட்டையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 அந்த மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உப்பாடா கடற்கரையில் தான் இந்த தங்க வேட்டை நடக்கிறது.

 அங்குள்ள உள்ளூர் வாசிகள் கடற்கரை மணலில் ஒதுங்கி இருக்கும் விலை மதிப்பற்ற தங்கத் துகள்கள், சிறு சிறு தங்க குண்டு மணிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .

பெரும்பாலோனோர் தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் உட்பட அனைவரும் கடற்கரை மணலை சலித்து வருகின்றனர்.

 நாள் ஒன்றுக்கு சுமார் 3500 மதிப்புள்ள தங்கத்தை சிலர் சேகரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

தங்கத்தை வாங்கும் வர்த்தகர்கள் நுண்ணிய தங்க துகள்களுக்கு ரூபாய் 300 முதல் 400 வரை கொடுப்பதாகவும், சற்று பெரிய தங்க குண்டுமணிகளுக்கு ரூபாய் 2000 வரை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

 நகை துணுக்குகளாகவும், சிறு கட்டிகள் ஆகவும் கூட தங்கம் கிடைப்பதாகவும் இவை மூழ்கிய ஏதாவது கோவில், கடலரிப்பால் காணாமல் போன வீடுகளை சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது .

கடல் அலைகள் அடித்து வந்து அவற்றை கடற்கரையில் சேர்த்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 நிவார் புயலுக்கு பிறகு தான் இந்த கடற்கரையில் தங்க மினுமினுப்பு அதிகம் தெரிகிறது.

 எது எப்படியோ? உப்பாடா கடற்கரையில் தங்கம் தேடுவோரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

 மறுபுறம் மக்களின் இந்த தங்க வேட்டை காரணமாக கடற்கரை ஒரு முக்கிய சுற்றுலா தளமாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 ஆந்திர மாநில துணை முதல் மந்திரி பவன் கல்யாண் இந்த கடற்கரையை சர்வதேச சுற்றுலாத்தலமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 உப்பாடா கடற்கரையில் தங்கப் புகழ் அது நோக்கி வெளியூர் காரர்களையும் ஈர்க்க தொடங்கியுள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை