வியர்க்குரு வராமல் தடுக்க எளிய வழிகள்

வியர்க்குரு வராமல் தடுக்க எளிய வழிகள் 

கொளுத்தும் கோடையில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் பாடா படுத்தும் விஷயம் ஏற்படும் வியர்வை சுரப்பினாலங்கள் அடைப்படுவதால் உள்ளே இருக்கும் வியர்வை தோளில் வீக்கத்தை உண்டாக்கும்.

 உடலில் ஊசியால் குத்துவது போல் எரிச்சலையும் , அரிப்பையும் தரும்.

 எனவே வியர்வை வராமல் பாதுகாக்கும் வழிகளை பார்ப்போம்.

1 . தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும்.

2.  உடலை இறுக்கும் ஆடைகளை தவிர்த்து விட்டு பருத்தியால் ஆன தளர்வான ஆடைகளை அணிவது நல்லது. 

3. கோடை முடியும் வரை ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்றவற்றுக்கு தடா போட்டு விடலாம் .

முழுக்கை சட்டை பிளவுஸ், முழங்கை வரை மறைக்கும் உடைகளுக்கு பதில் அரைக்கை வைத்து ஆடைகளை அணியலாம்.

4.  உடலில் போதுமான நீர்ச்சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம்.

 அதற்கு போதுமான நீர் அருந்துவதுடன் நீர் சத்துள்ள இளநீர், எலுமிச்சை ஜூஸ், மோர், நொங்கு ஆகியவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.

5.  பழங்களில் தர்பூசணி, சாத்துக்குடி, பப்பாளி , வெள்ளரிக்காய், திராட்சை ஆகியவற்றை உண்ணலாம்.

 காய்கறிகளால் ஆன சாலட்டுகளை அதிகம் எடுத்துக் கொள்வது உடல் சூட்டை குறைக்கும்.

6. ஐஸ் கட்டிகளை ஒரு மெல்லிய துணியால் சுற்றி வியர்க்குரு இருக்கும் இடங்களில் மெதுவாக வைத்துக் கொண்டால் எரிச்சல் குறையும்.

7. வியர்க்குருவிற்கு என்று இருக்கும் பவுடர்களை உபயோகிக்க கூடாது.

 அவை தோலில் துவாரங்களை மூடிவிடும்.

8. வியர்குரு உள்ள இடத்தில் தயிர் அல்லது கற்றாழை ஜல்லை எடுத்து தடவி காய்ந்த பிறகு கழுவி வந்தால் வியர்க்குரு குறையும்.

9.  வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாறு எடுத்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

10.  சந்தன பவுடர், வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும்.
11.  இரண்டு தேக்கரண்டி முல்தானி மெட்டியில் ஒரு தேக்கரண்டி பன்னீர் விட்டு கலந்து குழைத்து வியர்க்குரு உள்ள இடங்களில் மீது தடவி அரை மணி நேரம் காய விட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவி வர வியர்க்குரு மறையும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை