கோடையை குளிர்ச்சியாக்கும் இளநீர்
உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இளநீர் ஒரு வரப்பிரசாதம்.
இளநீரில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம், மாங்கனிஸ் ஆகியவை ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.
சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த தீர்வு இளநீர் தான்.
இந்த பானத்தில் அதிக அளவுக்கு பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரகக் கற்களை கரைப்பதுடன் மீண்டும் வராமல் தடுக்கவும் செய்கிறது .
பல நோயாளிகளுக்கு வைத்தியர்கள் இளநீரை ஒரு டானிக் போலவே பயன்படுத்த சொல்கிறார்கள்.
கோடையில் வரும் வெட்கை நோய்களுக்கு இளநீர் அருமருந்து .
கோடைகால சமயங்களில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் தினமும் இரண்டு இளநீராவது பருக வேண்டும்.
இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம், மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
வேறு எந்த பழச்சாறுகள் பானங்களை விடவும் குறைந்த அளவில் கலோரி உடையது.
இளநீர் மற்ற இனிப்பு பானங்களை விடவும் ஆரோக்கியம் அளிக்கக்கூடியது
இளநீர் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இனிப்பும் , கலோரியும் குறைவாக இருப்பதால் இளநீர் நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது .
ஒரு டம்ளர் இளநீருடன் வறுத்துப் பொடித்த ஒரு ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் மிளகு, கால் ஸ்பூன் ஓமம் கலந்து தினமும் குடித்து வந்தால் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும் .
இதை உணவு உண்ட பின் தான் பருக வேண்டும்.
ஒற்றைத் தலைவலியால் அவஸ்தை படுகிறவர்களுக்கு இளநீரில் இருக்கும் மாங்கனிசு நல்ல ஒரு மருந்து போல் செயல்படும்.
இளநீரில் இருக்கும் ஊட்டச்சத்து சருமத்தில் உள்ள இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்க பயன்படுகிறது என்பது மட்டுமல்லாமல் சருமத்தில் நோய்கள் வராமல் இருக்கவும் துணை புரிகிறது.
இளநீர் குறைந்த கலோரி உடையது என்பதால் சில கிலோ எடையை குறைக்க விரும்புகிறவர்களும், எடையை பராமரிக்க விரும்புபவர்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது .
பெண்கள் இளநீர் தினமும் குடித்து வந்தால் இளநீரில் இருக்கும் சத்துக்கள் நீண்ட ஆரோக்கியமான பளபளப்பு மிக்க முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
செரிமானத்தை மேம்படுத்த இளநீர் பயன்படுகிறது.
இளநீரில் இருக்கும் ரிபோப்ளேவின் தயமின் பேத்தோஜெனிக் அமிலம் என்ற மூன்றும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை விரட்ட உதவுகிறது.
இதனால் மனதிற்கு உற்சாகமும் ஊட்டமும் கிடைக்கிறது.