தமிழகத்தின் ரோமாபுரி

தமிழகத்தின் ரோமாபுரி


தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகில் இருக்கும் மணப்பாடு என்ற கிராமம் மூன்று பக்கங்கள் கடலால் சூழப்பட்டு ஒரு தீபகற்ப மீதவை கிராமமாக விளங்குகிறது.

 இந்த ஊரை மணவை என்றும் அழைக்கின்றனர் .

வரலாற்று சிறப்புகளுடன் சில கந்தோலிக்க சர்ச்சுகள் இருப்பதால் இதனை சின்ன ரோமாபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

 மணலும், காற்றும் நிறைந்த இவ்வூரில் மணல் காற்றில் வீசும் போது ஒரு பாட்டுசைத்தது போல் உள்ளதால் இதற்கு மணப்பாடு என்று பெயர் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

 முன்னொரு காலத்தில் இலங்கையிலும் பர்மாவிலும் தொழில் புரிந்த இவ்வூரை சேர்ந்த வணிகர்களால் பெரும் செல்வம் ஈட்டி இருந்தது.

 மேலும் இங்கு இருபதாம் நூற்றாண்டின் நடுவில் நிறுவப்பட்ட கல்விக் கூடங்கள் உள்ளூரில் பலரும் வெளி ஊர்களிலிருந்து மேலும் பலரும் கல்வி பெற காரணமாக விளங்கின.

 கவிதையும் , இசையும், நடிப்பும், ஓவியமும், சிற்பக் கலைகளும் இவ் ஊரில் வளர்ந்தன .

உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பகுதிகள் வந்து போகும் சுற்றுலாத்தலமாக விளங்கினாலும் இங்கு உள்ள மக்கள் மீன் பிடிப்பு தொழிலையே பிரதானமாக செய்கின்றனர் .

அத்தோடு படை பொருட்களையும் விற்பனை செய்கின்றன.

 இந்த ஊரில் பிடிக்கப்படும் மீன்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்கப்படுகின்றன.

 மணப்பாடு கருவாட்டுக்கும் சிறப்பு வாய்ந்தது.

  தீபகற்ப குன்றின் மீது உள்ள திருச்சிலுவை ஆலயம் 400 ஆண்டுகளுக்கு மேலானது என்றும், நடுக்கடலில் கப்பல் சிதைந்த பின் கரைக்கு தப்பி வந்த போர்ச்சுகீசிய மாலுமிகளால் உருவாக்கியது என்றும் நம்பப்படுகிறது.

 இவ்வாலையத்தில் கிறிஸ்துவ கிறிஸ்து இறந்த சிலுவை மரத்தின் சிறு துண்டுகள் என்று நம்பப்படும்
 பொருள் வணிகத்திற்கு வைக்கப்பட்டுள்ளது .

வேலை கட்டட முறையில் பிரம்மாண்டமானதாகவும் , அழகாகவும் கட்டப்பட்டுள்ள இரண்டு தேவலாயங்கள் புனித ஜேம்ஸ் தேவலாயம் மற்றும் தூய ஆவியானவர் ஆலயம் .

இவ்விரண்டும் ஒன்றை ஒன்று நோக்கம் வண்ணம் ஒரே தெருவில் இரு புறங்களிலும் உள்ளன மற்றும் பல சிறு தேவலாயங்களும் இவ்வூரில் உண்டு.

 இந்த ஊரிலேயே புனித சவேரியார் வந்து தங்கி இங்குள்ள மக்களை கத்தோலிகளாக மாற்றியதாக வரலாறு சொல்லப்படுகிறது.

 தீபகற்பத்தில் உலகில் இருக்கும் குகையில் அவர் தங்கி இருந்ததாக நம்பப்படுகிறது .
பரதவ மக்களுக்கு போர்ச்சுகீசிய குடும்ப பெயர்களான பர்ணாந்து, மிராந்த், வாஸ், டிசில்வா, டிகோஸ்தா , டிரோஸ் போற்றி பெயர்களையும் அவரே வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

1 கருத்துகள்

புதியது பழையவை