நோட்டுக்குள் எப்படி வந்தார் காந்தி ?

நோட்டுக்குள் எப்படி வந்தார் காந்தி?

இந்திய ரூபாய் நோட்டுகள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது.

 அதேசமயம் நீண்ட காலமாக அதில் மாறாத ஒரே விஷயம் மகாத்மா காந்தி.

 இந்தியாவில் 1882ல் தான் முதன்முறையாக காகித ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு கொண்டு வந்தனர் பிரிட்டிஷார் .

 அப்போது தொடங்கி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் அந்த ரூபாய் நோட்டுகளில் பிரிட்டிஷ் ஆறாம் ஜார்ஜ் மக்கள் ஆல்பர்ட் ஃபிரெட்ரிக் ஆர்தரின் படம் தான் இடம்பெற்றது.

 அதன் பிறகு 1949 இல் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியில் இறங்கிய இந்திய அரசு அந்த ஆண்டு வெளியிட்ட ஒரு ரூபாய் நோட்டில் சாரணத்தில் இருக்கும் அசோகர் தூண்டில் படத்தை முதன் முதலில் வைத்தது .

1950ல் சுதந்திர இந்தியாவின்  ஒரு ரூபாய் நோட்டுகள், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் பத்து மற்றும் ரூபாய் 100 போன்ற மதிப்பீட்டில் வெளியிட்டது.

 இந்திய அரசு அதை அடுத்து 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆயிரம் ரூபாய் ரோட்டில் தஞ்சை பெரிய கோயிலும், 5000 ரூபாய் நோட்டில் டெல்லியில் இருக்கும் இந்தியா கேட் படத்தையும், பத்தாயிரம் ரூபாய் நோட்டில் நான்கு முக சிங்கத்தோடும் இடம் பெற்றன .

அதற்கடுத்து ஆரியபட்டா செயற்கைக்கோள், டிராக்டர், ஹீரா குட் அணை தேயிலை பறிப்பது, கோனார் சூரிய கோயில் சக்கரம் ஒளி , மயில் போன்ற பல விஷயங்கள் இந்திய அரசு வெளியிட்ட ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றன.

 மகாத்மா காந்தியின் நூற்றாண்டை ஒட்டி 1969 ஆம் ஆண்டு இந்திய அரசால் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டில் தான் காந்தியின் படம் முதன் முதலில் இடம்பெற்றது.

 அதில் சேவா கிராமம் ஆசிரமத்தில் காந்தி அமர்ந்திருக்கும் படம் இடம் பெற்றது .

அதன் தொடர்ச்சியாக வேளாண்மை மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் தொடர்பான படங்கள் இடம்பெற்றன.

 அதன் பிறகு 1987இல் வெளியிடப்பட்ட 500 ரூபாய் நோட்டில் தான் தற்போது இருக்கும் காந்தி சிரித்துக் கொண்டிருக்கும் படமும், அவரின் தண்டியாத்திரையும் முதன்முதலாக இடம் பெற்றது.

 அதன் பிறகு வெளியான ரூபாய் நோட்டுகளில் இந்தியாவின் பல்வேறு முக்கிய அம்சங்களின் படங்கள் இடம்பெற்றன.

 1996 இல் அடித்த ரூபாய் நோட்டுகளிலும் சிரித்துக் கொண்டிருக்கும் காந்தியின் படம் நிரந்தரமாக இடம்பெற்று விட்டது.

 காந்தி சிரித்துக்கொண்டிருக்கும் போது அந்த படம் 1946 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசியல்வாதிகளில் ஒருவரான ப்ரெடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸ் பிரபுவின் அருகில் நின்று கொண்டு காந்தி வேறு யாரிடமோ பேசும்போது எடுக்கப்பட்டது.

 அந்தப் படத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட காந்தி தான் தற்போது வரை ரூபாய் நோட்டுகளில் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

 1954 ஆம் ஆண்டு ரூபாய் 1000 ரூபாய், 5000 மற்றும் ரூபாய் 10,000 நோட்டுகள் வெளியிடப்பட்டன.

 ஆனால் தற்போது இருப்பது போலவே அப்போதும் வரி ஏய்ப்புகளும் ஏற்பட்டது.

 அதனால் 1976 ஆம் ஆண்டு அவற்றை புழக்கத்திலிருந்து நீக்கியது இந்திய அரசு .

அதைப்போல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்திய ராணுவத்துக்காக உலகெங்கும் இருக்கும் இந்தியர்கள் அனுப்பும் படத்தை கையாளுவதற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது.

 அதற்காக அவர் வியான்மர் அதாவது அப்போதே பர்மாவில் bank of independents என்ற வங்கியை தொடங்கினார்.
 அந்த வங்கியால் வெளியிடப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் நோட்டின் ஒரு புறம் நேதாஜியின் புகைப்படமும் பிரிக்கப்படாத இந்தியாவின் புகைப்படமும் இடம்பெற்றது

கருத்துரையிடுக

புதியது பழையவை