மீதமான உணவை மாற்றும் கலை
சமைத்த உணவு சில சமயம் மீதமாகிவிடும்.
இன்றைய காலகட்டத்தில் விற்கிற விலைவாசியில் செலவழித்து செய்த உணவை குப்பையில் கொட்ட முடியாத சூழ்நிலை உள்ளது.
அப்படி மிதமான உணவினை உருமாற்றம் செய்து உபயோகப்படுத்தி விடலாம்.
மதியம் செய்த பொரியல் மீதம் ஆகிவிட்டால் அத்துடன் பொடி பொடியாக வெங்காயம், தக்காளியை நறுக்கி சேர்த்து உருமாற்றம் செய்து இரவு டிபனுக்கு சைடிஸ் செய்து விடலாம்.
காலையில் செய்த குழம்பு மீதமாகிவிட்டால் அதில் உள்ள நீரை வடிகட்டி காய்கறிகளை மட்டும் எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா பொடி போட்டு வதக்கி சப்பாத்தி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கு சைட் டிசாக சாப்பிடலாம்.
சில சமயம் ரசம் மீதமாகிவிடும். அந்த சமயம் அதில் உள்ள கருவேப்பிலையை எடுத்துவிட்டு அதில் இருக்கும் பருப்பு தக்காளியை நன்கு கடைந்து சப்பாத்திக்கு பிசையும் மாவுடன் கலந்து செய் தேவையானால் சிறிதளவு மசாலா சேர்த்து சப்பாத்தி செய்தால் அனைவரும் பாராட்டும் மசாலா சப்பாத்தி ஆகிவிடும் .
இட்லி மாவு என்னதான் ஃபிரீசரில் வைத்தாலும் ஒன்று இரண்டு நாட்கள் தான் புளிப்பு இல்லாமல் இருக்கும் பிறகு புளித்து விடும்.
மாவில் தேவையான அளவு பெருங்காயத்தூள் , பச்சை மிளகாய், கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஊத்தாப்பமாக செய்தால் குடும்பத்தினர் அனைவரும் விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள்.
இப்படி செய்த பின்னரும் மாவு மீதம் இருந்தால் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் கலந்து ஊறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கலந்து இட்லியாக செய்தால் புது சுவையுடன் இட்லி தயார்.
குடும்பத்தினர் அனைவரும் விருப்பத்துடன் நூடுல்ஸ் செய்ய சொல்கிறார்களே என்று செய்வோம் அது மீதமாகி விட வாய்ப்பு உண்டு.
அதோடு சீஸ் துருவி சேர்த்து உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கலந்து மைதா மாவு பேஸ்ட் போல் தயார் செய்து அதில் எடுத்து பிரட் தூளில் புரட்டி கட்லெட் போல செய்து பொரித்து எடுத்தால் சுவையான கட்லெட் தயார்.
இதுபோன்று ஒவ்வொரு மீந்து போன உணவு பண்டங்களையும் உருமாற்றி புது வடிவம் கொடுத்து ருசியான உணவாக மாற்றி விடலாம்.