தொண்டை கரகரப்பு நீங்க
பொதுவாக ஒருவருக்கு சளி பிடித்திருக்கும்போது தொண்டை கரகரப்பு, தொண்டை கட்டு ஏற்பட்டு தொல்லை கொடுக்கும்.
அதனை போக்க பிடித்த பனங்கற்கண்டு, அதிமதுரப்பொடி, தேன் மூன்றையும் சூடான பாலில் கலந்து பருகினால் தொண்டைக்கட்டு இதமாக இருக்கும்.
குரல் வளம் பெருகும்.
மா இலையை சுட்டு தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.
நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தொடர் தொண்டை கரகரப்பு சரியாகும் .அதனுடன் விக்கலையும் விரட்டி விடலாம்.
இஞ்சி சாறு, துளசி சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேர்வது இருக்காது.
சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்து பொடித்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
ஒரு நாளைக்கு நான்கு வேளை உப்பு தண்ணீரால் வாய் கொப்பளித்து துப்பினால் வெதுவெதுப்பான தொற்று சரியாகும் .
வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து தொண்டையில் படும்படி கொப்பளித்து துப்ப வேண்டும்.
வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தேனூற்றி மூடி நன்றாக ஊறும் வரை வைத்து சாப்பிட்டு வர தொண்டை புண்கள் குறையும்.
மிளகு, சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் இருமல், காய்ச்சல் குணமாகும்.
இஞ்சி உடன் தேன், இலவங்கப்பட்டை, துளசி மூன்றையும் கொதிக்க வைத்து குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.
தண்ணீரில் நான்கு துளசி இலையை தினமும் போட்டு குடிக்க தொடங்க தொடர் இருமல் நீங்கும் .
சுடு தண்ணீரில் துளசி ,கற்பூரவள்ளி இலை, நொச்சி இலை என ஏதாவது ஒன்றை போட்டு ஆவி பிடிக்க சளி, தலைபாரம் , தலைவலி குணமாகும்.
விளா மரப்பட்டையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த கசாயத்தை வடிகட்டி குடிக்க வறட்டு இருமல், மூச்சு இரைப்பு, வாய் கசப்பு நீங்கும் .
புதினாவில் மெந்தோல் சத்து அதிகமாக இருப்பதால் கட்டியிருக்கும் சளியை கரைத்து வெளியே செல்லும் தன்மை இதற்கு உண்டு .
இதனால் தொண்டை கரகரப்பு சரியாகும் ,
வெந்தயம் தொண்டை தொற்றுக்கு சிறந்த நிவாரணியாகும்.
வெந்தயத்தை ஊற வைத்து மென்று சாப்பிடலாம்.
உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில் இருந்த தொண்டைக்கு இதமாக இருக்கும்.
சரியான நேரத்தில் சரியான குறிப்பு
பதிலளிநீக்கு