மழைக்காலத்திற்கு ஏற்ற உணவு முறைகள்

மழைக்காலத்திற்கு ஏற்ற உணவு முறைகள் 

மழைக்காலம் ஆரம்பித்தாலே பலருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும் .

குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

 இதோடு மற்றும் இன்றி மழைக்காலத்தில் வயதானவர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கும். எனவே இதுபோன்ற நேரங்களில் குளிர்ந்த உணவுகளை தவிர்த்து சூடான உணவுகளை சாப்பிடுவதை நாம் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

 மேலும் வழக்கமான டீ , காபி போன்றவற்றை தவிர்த்து கசாயம் போன்றவற்றை நாம் சேர்த்துக் கொள்வது பலன் அளிக்கும்.

 குறிப்பாக ஆடாதோடா இலையுடன், மிளகு, தூதுவளை, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.

 இதுபோன்று கற்பூரவள்ளி இலை அல்லது துளசி இலைகளுடன் மிளகு, வெற்றிலை சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் சளி போன்ற பிரச்சனைகள் மழைக்காலத்தில் ஏற்படாது.

 மேலும் மழைக் காலங்களில் ஏற்படும் காய்ச்சலில் இருந்து பாதுகாக்க நிலவேம்பு கசாயம் பருகுவது மிகுந்த பலன் அளிக்கும்.

 பழங்கள், பருவ காலங்களில் அதிக அளவில் கிடைக்கும் பிளம்ஸ், செரி, மாதுளை போன்ற பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நார்ச்சத்து அதிக அளவில் நிரம்பி உள்ளதால் இதனை சாப்பிடுவது நல்லது.

 குறிப்பாக மழைக்காலங்களில் கடைகளில் விற்பனையாகும் வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் பழச் சாறுகள் வாங்கி உண்பதை தவிர்த்து வீடுகளிலேயே பழச்சாறு பருகலாம்.

 சூப்பு வகைகள், காய்கறி சூப், காளான் சூப் போன்றவற்றை தினமும் சூடாகப் பருகினால் உடலுக்கு நன்மை பயக்கும் .

அதில் மறக்காமல் மிளகு சேர்த்துக் கொள்வது கூடுதல் நன்மை பயக்கும்.

 மழைக்காலத்தில் இனிப்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம் பால், தயிர், வெண்ணை, நெய் போன்றவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது .

ஆனால் மோர் சாப்பிடலாம் மேலும் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

 காலை மற்றும் மதிய வேலைகளில் உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம் .

உணவில் இஞ்சி பூண்டு போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 மேலும் சேனைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 குறிப்பாக மழைக்காலத்தில் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் .
முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நன்மை பயக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை